விஜய் எல்லாத்தையும் பாத்துட்டுதா இருக்காரு – விஜய்யின் மேனேஜர். தில் ராஜு மீது கடுப்பில் இருக்கிறாரா விஜய் ?

0
459
varisu
- Advertisement -

இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் வாரிசு படம் நாளை மறுநாள் 11ஆம் தேதி வெளியாகும் நிலையில் படத்திற்க்கான ஆவல் ரசிகர்கள் மத்தியில் இமயத்தை தொட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சங்ககளை பெற்ற நிலையில் ஆக்ஷன் திரைக்கதையை தவிர்த்து குடும்ப கதையில் இப்படமானது தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

வாரிசு படத்தின் உருவாக்கம் அறிவித்த போதிலிருந்தே பல சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் படத்தின் சில காட்சிகள் வெளியானது பின்னர் தெலுங்கு மொழியில் உருவாகும் அப்படத்தை வெளியிட ஆந்திராவில் பிரச்சனை ஏற்பட்டு வெளியாக்கும் தேதி தள்ளிப்போனது. இதனையடுத்தது விஜய் வாரிசு அரசியலில் இறங்க போகிறார் என்று சர்ச்சையிம் வெளியானது. மேலும் இதனை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் மற்றொரு முன்னணி நடிகரான அஜித்தின் துணிவு படமும் வார்சுடன் ஒன்றாக வெளியாக இருக்கிறது.

- Advertisement -

துணிவு படத்தின் போஸ்டர் வெளியானதில் இருந்தே பலதாவிதமான அப்டேட்டுகளை கொடுத்தும், ப்ரோமோஷன்கள் செய்தும் வருகின்றனர் துணிவு படக்குழுவினர். ஆனால் வாரிசு படத்தில் இசை வெளியிட்டு விழாவிற்கு பிறகு எந்த விதமான அப்டேட்டுகளும் வாரிசு படக்குழுவினரிடம் இருந்து வரவில்லை அதோடு ப்ரோமோஷன்களும் நடைபெறவில்லை . இதனால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர் என்றுதான் சொல்லவேண்டும்.

மேலும், வாரிசு படத்துக்கு தமிழ் நாட்டில் 4 மணி ரசிகர் ஷோ தான் கிடைத்து இருக்கிறது. துணிவு படத்துக்கு 1 மணி ஸ்பெஷல் ஷோ கிடைத்து இருக்கிறது, மேலும், பெரும்பாலான முக்கிய திரையரங்குகள் துணிவு படத்திற்கே ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் வாரிசு படத்தை தெலுங்கில் 14 ஆம் தேதி வெளியிட இருப்பதாக தில் ராஜூ பேட்டி அளித்து இருக்கிறார். அதிலும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தையும் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படத்தையும் தெலுங்கு ரசிகர்கள் முதலில் பார்க்க வேண்டும் என்று தான் வாரிசு படத்தை 14 ஆம் தேதி வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்

-விளம்பரம்-

இப்படி பட்ட நிலையில் தான் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷிடம் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வாரிசு இசை வெளியிட்டு விழாவிற்கு பிறகு போஸ்டர் இல்லை, புதிய ப்ரோமோக்கள் இல்லை, நாள் ஒத்திவைக்கப்பட்டது, ஆனால் உலகளவில் வாரிசு படம் வெளியாக இன்னும் 1 நாள் மட்டுமே உள்ளது என்று விஜய்யின் ரசிகர் ஒருவர் தனது விரக்தியை வெளிப்படுத்தினார். மேலும் இவரை தொடர்ந்து பல ரசிகர்கள் இதே கேள்வியை கேட்டிருந்தனர்.

அதற்கு பதிலளித்த ஜெகதீஷ் தற்போது இங்கே நடக்கும் அனைத்தும் விஜய் அவர்களுக்கு தெரியும், அதோடு கண்டிப்பாக வாரிசு படம் நல்ல படமாக பெரிய வெற்றி பெற்று பல நாட்கள் திரையரங்குகளில் ஓடும் என்று விஜய் தெரிவித்ததாக கூறியிருந்தார். தமிழ் சினிமாவில் இரு பெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் படங்கள் வரும் 11ஆம் தேதி ஒன்றாக வெளியாகும் என்பதினால் யாருடைய படம் வெற்றியடையும் என்று கடந்த வாரத்தில் இருந்தே சோசியல் மீடியாவில் ரசிகர்கள் விவாதித்து வருவது குறிப்பிடதக்கது.

Advertisement