பழக பழகதாங்க கத்துக்க முடியும், விஜய் மகன் இயக்கிய குறும்படத்தை பாருங்க. உண்மையா சூப்பரான Visualலாம் தரமா இருக்கு.

0
587
Sanjay
- Advertisement -

உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செயது. இருக்கிறது. ஆனால், இறுதியாக இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் பெரும் தோல்வியை சந்தித்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

-விளம்பரம்-

வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். அதனை தொடர்ந்து சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து உள்ளார். ஜேசன் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்து வருகிறார். ஜேசன் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து. இதுவரை இவர் ஜங்க்ஷன் மற்றும் சிரி என்ற சில குறும்படத்தை இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

ஆனால், இந்த இரண்டு குறும்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் தற்போது இவர் மீண்டும் ‘Pull The Trigger’ என்ற குறும்படத்தை இயக்கி இருக்கிறார். 13.30 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் சஞ்சய் இயக்கிய மற்ற குறும்படத்தை விட நன்றாகவே இருக்கிறது. அதே போல இதற்கு முன்னர் இவர் இயக்கிய குறும்படங்களை விட இதில் தரமும் நன்றாகவே இருக்கிறது.

பீஸ்ட் திரைப்படம் வெளியான போது இசை வெளியீட்டு விழா நடத்த முடியாமல் போனது. இதனால் சன் டிவி பேட்டி ஒன்றில் விஜய் கலந்து கொண்டார். இதில் இயக்குனர் நெல்சன் அவர்கள் நடிகர் விஜயுடன் நேர்காணல் நடத்தினார். அப்போது அவர் விஜயின் குடும்பம் பற்றியும் சில கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து, அடுத்ததாக என்ன செய்யப்போகிறார்? அவருக்கு சினிமாவில் ஆர்வம் இருக்கா? என்று கேள்வி எழுப்பினார்.

-விளம்பரம்-

இதற்கு விஜய் அவர்கள் கூறியிருப்பது, அவர் மனதில் என்ன இருக்கு என்று தெரியவில்லை. நான் அவரை வற்புறுத்த மாட்டேன். அவருக்கு பிடித்தால் பண்ணட்டும் என்று விட்டு விட்டேன்.ஒருமுறை பிரேமம் படத்தோட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் என்னை சந்திக்க வீட்டுக்கு வந்தார். பின் ஒரு கதை சொல்லணும் என்று சொன்னார். நானும் சரி சொல்லுங்கள் என்று சொன்னேன். அதற்கு பிறகு தான் உங்க பையன் கிட்ட சொல்லனும் என்று சொன்னார்.

அந்த கதையை கேட்டேன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. எப்படியாவது சஞ்சய் இந்த கதையில் நடிக்க ஓகே சொல்லிடுவான் என்று நினைத்தேன். ஆனால், அவன் இப்போதைக்கு எதுவும் வேண்டாம் இரண்டு வருடம் டைம் வேணும் என்று கேட்டான். நானும் சரி என்று சொல்லிவிட்டேன். அவன் கேமராவுக்கு முன்னாடி வேலை பண்ண போறானா? இல்லை பின்னாடி வேலை பண்ண போறானா? என்று தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement