அடடடா, ம க பா மகளா இது ? எப்படி வளந்துட்டார் பாருங்க – ம க பாவே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.

0
3813
- Advertisement -

விஜய் டிவி மூலம் பல தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் மா.கா.பா ஆனந்த். மா.கா.பா ஆனந்த் அவர்கள் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை சென்னையில் தான் முடித்தார். பின் ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அந்த கம்பெனியில் வேலை செய்தவர் தான் சுஸினா ஜார்ஜ்.

-விளம்பரம்-

சுஸினா பாண்டிசேரியை சேர்ந்தவர். மேலும் அவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆவார். பின் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. மா.கா.பா ஆனந்த் அவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது மா.கா.பா விற்கும், சுஸினாவிற்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். ஆனால், இவரது மகன் மற்றும் மகள்களை அவ்வளவாக வெளியுலகதிற்கு காட்டுவதில்லை.

இதையும் பாருங்க : பீஸ்ட் படத்தின் போஸ்டரை போட்டு விஜய் குறித்து கேட்ட ரசிகர் – ஒரே வார்த்தையில் பதில் அளித்த ஷாருக் கான்.

- Advertisement -

அவ்வளவு ஏன் சமூக வலைதளத்தில் கூட தனது குடும்ப புகைப்பங்களை மிகவும் அளவாக தான் பதிவிடுவார் ம க பா. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது மகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ம க பா மகள் இவ்வளவு வளர்ந்து விட்டாரே என்று வியந்து போயுள்ளனர்.

vijay tv makapa Anand wedding anniversary celebration in Vijay tv actors  and team - YouTube

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் ம க பா தனது 15வது திருமண நாளை கொண்டாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட மா கா பா ஆனந்த் அவர்கள் படங்களில் நடித்துக் கொண்டும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார். தற்போது விஜய் டிவியில் பல்வேரு நிகழ்சகளை தொகுத்து வழங்கி வருகிறார் ம க பா.

-விளம்பரம்-
Advertisement