கதாநாயகி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் – விஜய் டிவியின் அடுத்த ஹீரோயின் இவர் தான். அப்போ குட்டி லாஸ்லியா ?

0
2714
Kadhanayagi
- Advertisement -

கதாநாயகி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனால் வித்தியாசமான கான்செப்டில் புதுப்புது நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறார்கள். டான்ஸ், பாடல், சமையல் என்று பல விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான புது நிகழ்ச்சி தான் யார் அடுத்த கதாநாயகி. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கே எஸ் ரவிக்குமார், ராதிகா சரத்குமார் இருக்கிறார்கள். வழக்கமான சிங்கர், டான்ஸ் என்பது போல் நிகழ்ச்சி இல்லாமல் தற்போது கதாநாயகி தேடும் பயணத்தையும் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இந்த 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

கதாநாயகி நிகழ்ச்சி:

அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றால் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவருவதும் வழக்கம் தான். இதில் அடுத்த கண்ணம்மா, அடுத்த பாக்யா யார் என்ற தேடலுக்கான நிகழ்ச்சி. இதில் வெற்றி பெறும் நபர்களை வைத்து சீரியல் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று தான் வருகிறது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை குரேஷி, பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். கலகலப்பாகவும், சீரியஸாகவும் இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு விஜய் டிவி பிரபலங்களும் சப்போர்ட் செய்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கடுமையான போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

நிகழ்ச்சியின் இறுதி சுற்று:

அந்த வகையில் கடந்த வாரம் தான் செமி பைனல் சுற்று நடைபெற்றது. அதிலிருந்து சில பேர் நேரடியாகவே பைனல் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கதாநாயகி நிகழ்ச்சிக்கான வின்னர் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. வேறு யாருமில்லை, இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற இரட்டை சகோதரிகள் ரூபினா மற்றும் ருபிசினா தான். இவர்கள்தான் இந்த கதாநாயகி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் என்று கூறப்படுகிறது.

டைட்டில் வின்னர்:

இவர்கள் இருவரும் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நன்றாகத்தான் ஒவ்வொரு போட்டியையும் சவாலாக எடுத்துக் கொண்டு வந்தார்கள். இவர்களுடைய நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். தற்போது இவர்கள் டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறியிருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் குட்டி லாஸ்லியா என்ற பெயரெடுத்த ஜனனி டைட்டில் அடிக்கவில்லை. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்றுதான் தெரியவில்லை. இந்த வார இறுதியில் தான் கதாநாயகி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவரும்.

Advertisement