இதுக்கு வாழ்த்து சொல்லாமலே இருக்கலாமே – தாதா சாகேப் விருது வென்ற ரஜினிக்கு வாழ்த்து சொன்ன கமலை கேலி செய்த விஜய் டிவி சீரியல் நடிகை.

0
9237
saranya
- Advertisement -

தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரஜினிக்கு நடிகர் கமல் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்ததை விஜய் டிவி சீரியல் நடிகையான சரண்யா கலைத்துள்ளார். செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் நடிகையானவர் பல பேர் இருக்கின்றனர், அதில் சரண்யாவும் ஒருவர். ஆரம்பத்தில் நடிகை சரண்யா கலைஞர் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்தார். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சி, புதிய தலைமுறை என்று பல தொலைக்காட்சியில் பணியற்றிய சரண்யா பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் நடிகையானார்.

-விளம்பரம்-

மேலும், இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்திலும் நடித்து உள்ளார். நெஞ்சம் மறப்பதில்லை சீரியலை தொடர்ந்து ஆயுத எழுத்து சீரியலிலும் நடித்தார். சமீபத்தில் இந்த சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டது. தற்போது அம்மணி எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரஜினிக்கு நடிகர் கமல் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்ததை விமர்சித்து உள்ளார்.

இதையும் பாருங்க : என்ன பேசவிடுங்கடா, பிளைட்ட மிஸ் பண்ணிடுவேன் – சூர்யா ரசிகர்களால் கடுப்பான ராஷ்மிகா. கழுவி ஊற்றும் ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னநனி நடிகராக திகழ்ந்து வரும் ரஜினி சினிமா துறையில் பல்வேறு விருதுகளை பெற்று இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் மத்திய அரசு ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது.தாதா சாகேப் பால்கே விருதை பெரும் ரஜினிக்கு தங்கத் தாமரையுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படும் . இந்திய சினிமா துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது, ஏற்கெனவே நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரஜினிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் ரஜினியின் திரைத்துறை நண்பரும் நடிகரும் மக்கள் நீதி மைய்ம் கட்சியின் தலைவருமான கமல் ட்விட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

கமலின் இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சரண்யா, இதுக்கு வாழ்த்து சொல்லாமலே இருக்கலாமே என்று பதிவிட்டுள்ளார். ரஜினிக்கு வாழ்த்து சொன்ன கமல் தனது ட்விட்டர் பதிவில் திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் என்ற வரியை குறிப்பிட்டு தான் சரண்யா இந்த பதிவை போட்டுள்ளார் என்று தோன்றுகிறது.

Advertisement