படுத்த படுக்கையாய் இருந்தவருக்கு பகையை மறந்து உதவிக்காரம் நீட்டிய விக்ரம் – இவர் யார் தெரியுமா ?

0
2111
Vikram
- Advertisement -

பழைய பகையை மனதில் வைத்துக் கொள்ளாமல் தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு நடிகர் விக்ரம் செய்திருக்கும் உதவி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90களின் தொடக்க காலத்தில் பிரபலமான தயாரிப்பாளர் வி.ஏ.துரை. சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் தயாரிப்பாளர் வி.ஏ.துரை அவர்கள் ஏ.எம் இரத்தினத்திடம் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி இருந்தார். பின் இவர் “எவர் கீரின் இன்டர்நேஷனல்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

இதில் இவர் பிதாமகன், சேது, பாபா போன்ற பல வெற்றி படங்களை தயாரித்து இருக்கிறார். தற்போது இவர் பணம் இல்லாத காரணத்தினால் விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் மிகவும் செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். அதோடு ஒரு காலத்தில் பிரபல தயாரிப்பாளராக இருந்த இவர் சமீப காலமாக நோயால் பாதிக்கப்பட்டு பார்த்துக்கொள்ள யாரும் இல்லாமல், பணமும் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்.

- Advertisement -

துரையின் உடல்நிலை:

இவர் ரஜினி, சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் மிகவும் நெருக்கமான ஒருவராக இருந்தார். ஆனால் தற்போது நீரிழிவு நோயால் காலில் ஆறாத புண் ஏற்பட்டு நடிக்க முடியாமல் அவதிப்பட்டு இருந்தார். இதை அடுத்து தயாரிப்பாளர் எஸ்.பி.முத்துராமன் உதவியால் எழுந்து அமரும் அளவிற்கு இவரின் உடல் தேரி விட்டது. இருந்தாலும், இவரின் காலில் நீரிழிவு நோயின் காரணமாக புண் ஆறாமல் இருந்து இருக்கிறது.

நடிகர்கள் செய்த உதவி:

இதனால் தொடர்ந்து இவரது உடல் மெலிந்து இருக்கிறார். மேலும், இதனை சரி செய்வதர்க்கு கூட பணம் இல்லாமல் இருக்கிறார் வி.ஏ.துரை. இவரின் நிலைமையை அறிந்து நடிகர் சூர்யா அவர்கள் 2 லட்சம் பண உதவி செய்து இருந்தார். அதே போன்று நடிகர் கருணாஸ் 50 ஆயிரம் ரூபாய் உதவி செய்து இருந்தார். இவர்களை தொடர்ந்து நடிகர் ரஜினியும் பண உதவி செய்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் துரை அவர்களுக்கு ஒரு காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

விக்ரம் செய்த உதவி:

இதனால் தற்போது அவருக்கு செயற்கை கால் பொறுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், தேவையான பணம் இல்லாததால் அவர் மிகவும் அவஸ்தை பட்டு இருக்கிறார். இந்நிலையில் இதைப் பற்றி அறிந்த நடிகர் விக்ரம் அவர்கள் அந்த செயற்கை காலுக்குரிய பணத்தை கொடுத்து உதவி செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

விக்ரம்-துரை பழைய பகை:

ஏற்கனவே பிதாமகன் படம் வெளிவந்த வெளிவந்த போது விக்ரமிற்கு சுமார் 25 லட்சம் ரூபாய் சம்பளம் பாக்கியை துரை தரவேண்டும் என்ற செய்திகள் எல்லாம் பயங்கர சர்ச்சையாக இருந்தது. இந்த பஞ்சாயத்து நீண்டு கொண்டே சென்றிருந்தது. இருந்தாலும், பழைய பகையை மனதில் வைத்துக் கொள்ளாமல் நடிகர் விக்ரம் அவர்கள் தயாரிப்பாளர் துரைக்கு உதவி செய்திருக்கிறார். இதை அறிந்த தயாரிப்பாளர் துரை கண்கலங்கி நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Advertisement