சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியரின் பேத்தி இந்த சேரன் பட நடிகையா.

0
448
cheran
- Advertisement -

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியரின் பேத்தி ஒரு நடிகை என்பது உங்களுக்கு தெரியுமா ? முத்துச்சாமி அய்யர், பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் உச்சுவாடி எனும் கிராமத்தில் பிறந்தார். குழந்தைப் பருவத்தில் தந்தையை இழந்த முச்துச்சாமி, தனது தாயுடன் திருவாரூர் சென்று கிராமக் கணக்கர் பணி செய்தார். இருப்பினும் அதிகாலையிலும், இரவிலும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தார். முச்துச்சாமி அய்யரின் படிப்பாற்றலைப் பாராட்டி, முத்துச்சாமி அய்யரை, சென்னை சர் ஹென்றி மாண்டிசரி பள்ளியில் தன் சொந்த பொருட்செலவில் படிக்க வைத்தார்.

-விளம்பரம்-

பின்னர் 1854-இல் முத்துச்சாமி அய்யர் சென்னை இராஜதானிக் கல்லூரியில் படிக்கும் போது, ஆங்கிலக் கட்டுரை போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 500-ஐ வென்றார். பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். பள்ளிப்படிப்பு முடித்த முத்துச்சாமி அய்யர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை படிப்பு முடித்து, பின்னர் சட்டம் பியின்றார். 1871 – 1877 முடிய மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய முத்துச்சாமிக்கு 1877-இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 1895 வரை பணியாற்றியானர.

- Advertisement -

1893-இல் மூன்று மாதங்கள் சென்னை உயர்நீதிமன்றத் தற்காலிக தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்.மதிநுட்பம், கூரிய அறிவாற்றல், நினைவாற்றல், சட்ட நுணுக்கம் அறிந்த முத்துச்சாமி அய்யர் பெண் கல்வி, விதவை மறுமணம் போன்ற சமூக சீர்திருத்தக் கொள்கைகளுக்கு ஆதரவளித்தார்.1895 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி முத்துச்சாமி காலமானார். முத்துச்சாமி அய்யரின் நினைவை பாராட்டும் விதமாக, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அவரது முழு உயரச் சிலையை வைத்துள்ளனர்.

மேலும், இவரது பேத்தி ஒரு நடிகை என்பது பலரும் அறிந்திராத ஒன்று. ஆம், சேரனின் ராமன் தேடிய சீதை படத்தின் நடித்த பிரபல நடிகை விமலா ராமன் தான் இவரது பேத்தி. தமிழ் சினிமவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு காணாமல் போன நடிகர் நடிகைகள் பலர் உள்ளனர். அந்த வகையில் பிரபல மலையாள நடிகையான விமலா ராமனும் ஒருவர். இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ, கடந்த 2004 ஆம் ஆண்டில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான ‘பொய்’ என்ற படத்தின் மூலம் தான்.

-விளம்பரம்-

அதன் பின்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘ராமன் தேடிய சீதை‘ என்ற படத்தில் சேரன் ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்பு இல்லை என்றாலும் மலையாளத்தில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தன. மலையாளத்தில் மம்முட்டி, மோகன் லால், திலீப் போன்ற பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார் விமலா ராமன்.

கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம்ஆஸ்திரேலியாவில் தான். மேலும், 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு பரிசையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிகர் வினய்யுடன் காதலில் இருப்பதாக கூட சமீப காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Advertisement