ராட்சசன மிஞ்சிடுச்சா ? போர் தொழில் படம் குறித்து விஷ்ணு விஷால் கேள்வி – அஷோக் செல்வன் பதில். ரசிகர்களின் கமெண்ட்ஸ்.

0
2587
PorThozil
- Advertisement -

அசோக் செல்வனின் போர் தொழில் படம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்டிருக்கும் டீவ்ட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அசோக் செல்வன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் போர் தொழில். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் உயர் க்ரைம் ப்ரான்ச் அதிகாரியாக சரத்குமார் இருக்கிறார். இவர் ரொம்ப டெரரான ஆள். இவருடைய தலைமையின் கீழ் வேலை செய்பவர் தான் அசோக் செல்வன். ஆனால், அசோக் விளையாட்டுப் பிள்ளையாக அதிக புத்திசாலி கொண்ட இளைஞராக இருக்கிறார். இவர் புதிதாக போஸ்டிங் வாங்கி வருகிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் தான் திருச்சியை மையமாக வைத்து ஒரே மாதிரியான தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

போர் தொழில் படம்:

இந்த கொலைகளில் எந்தவித தடயங்களும் இல்லாமல் நடக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கு அசோக் செல்வன்- சரத்குமார் இடம் வருகிறது. அசோக் வழக்கை கையில் எடுத்தவுடன் சரத்குமார் கடுமையாக போராடுகிறார். ஆனால், அசோக் செல்வன் விளையாட்டுத்தனமாக கடுப்பேற்றும்படி நடந்து கொள்கிறார். இன்னொரு பக்கம் சீரியல் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

படத்தின் கதை:

இன்னொரு பக்கம் போலீசுக்குள் இடையில் பாலிடிக்ஸ் நடக்கிறது. இதையெல்லாம் தாண்டி தொடர் கொலைகளை செய்யும் நபர்களை சரத்குமார் -அசோக் செல்வன் இணைந்து கண்டுபிடித்தார்களா? இந்த கொலைகளுக்கு பின்னணி என்ன? என்று சொல்வதே படத்தின் மீதி கதை. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது அதுமட்டுமில்லாமல் படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

விஷ்ணு விஷால் டீவ்ட்:

இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ராட்சசனை மிஞ்சி விட்டதா? படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த அசோக் செல்வன், மச்சி அதற்கு பதில் சொல்லும் சிறந்த நபர் நீ தான். நீயே பார்த்துவிட்டு சொல்லு. நன்றி டா. நீ எனக்காக மகிழ்ச்சியாக இருப்பாய் என்று எனக்கு தெரியும். வாழ்த்துக்கள் என்றும் கூறியிருக்கிறார்.

விஷ்ணு விஷால் திரைப்பயணம்:

இப்படி அசோக் செல்வன்- விஷ்ணு விஷால் பதிவிட்டு இருக்கும் பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஷ்ணு விஷால் திரைப்பயணம்:விஷால். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement