‘உருட்டு உருட்டு’ – சமந்தாவுடன் இத்தனை மணி நேரத்தில் திருப்பதி மலை ஏறிவிட்டதாக சொன்ன ராம்யாவை வச்சி செய்யும் ரசிகர்கள்.

0
749
ramya
- Advertisement -

சீரியல் நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பல்வேறு பெண் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, ரம்யா, பாவனா போன்ற பல்வேறு பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாது பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரம்யா பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், ரம்யாவிற்கு என்று ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறார்கள். 2014 ஆம் ஆண்டு சென்னை போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் ரம்யா. அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கில்லாடிகள் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

- Advertisement -

தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரம்யா கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்குப் பின்னர் இனி தொலைக்காட்சிகளில் பணியாற்ற மாட்டேன் என்று அறிவித்திருந்தார் ரம்யா. ஆனால், திருமணம் முடிந்த ஓராண்டு காலத் திலேயே விவாகரத்து செய்துவிட்டார். தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த போதே 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா.

அதன் பின்னர் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.நடிகை ரம்யாயாவும் நடிகை சமந்தாவும் நெருங்கிய தோழிகள் ஆவார்கள். ரம்யா திருமணத்திற்கு கூட நடிகை சமந்தா வந்திருந்தார் அதே போல இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர் சுற்றுவதையும் வாடிக்கையாக வைத்து வருகின்றனர். ஆனால், கடந்த சில காலமாக இவர்கள் திருப்பதிக்கு அடிக்கடி சென்று வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதுவரை சமந்தாவுடன் சேர்ந்து ரம்யா 3 முறை திருப்பதி மலைக்கு நடந்தே சென்று ஏறி இருக்கிறார். அதிலும் கடந்த 2018 ஆம் ஆண்டு இவரும் சமந்தாவும் திருப்பதி மலைக்கு நடந்து சென்ற போது எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த ரம்யா 3 ஆயிரத்து 500 படிக்கட்டுகளை 2.5 மணி நேரத்திற்கும் குறைவாக ஏறி விட்டதாக பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இவர்கள் இருவரும் மூன்று முறை திருப்பதி மலைக்கு நடந்தே சென்றுள்ளார்களாம். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரம்யா, சமந்தாவும் நானும் திருப்பதி மலையை ஒன்றே முக்கா முதல் 2 மணி நேரத்திற்குள் ஏறி விடுவோம் என்று கூறி இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அது எப்படி 3500 படிக்கட்டுகளை 2 மணி நேரத்தில் ஏற முடியும். ஒரே உருட்டா இல்ல இருக்கு. பொண்ணுங்க

Advertisement