-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

இது மூன்றாவது முறை நடந்தது – ஏஐ தொழில்நுட்பத்தால் தொகுப்பாளினி ரம்யாவுக்கு நேர்ந்த சோகம் – என்ன தெரியுமா?

0
121

தொகுப்பாளினி ரம்யா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் ரம்யா. இவர் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் புகழ்பெற்ற தொகுப்பாளினியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாவில் பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் முறைப்படி பரத நாட்டியம் கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் ரம்யா நடித்து மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.

ரம்யா திரைப்பயணம்:

மேலும், இவர் பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் பிட்னஸ் பிரீக் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவார். கடுமையான உடற்பயிற்சி மூலம் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் இவர் அதிக ஆர்வம் உடையவர். அதனுடைய வெளிப்பாடுதான் இவருக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளர் என்ற சான்றிதழ் கிடைத்து இருக்கிறது.

ரம்யா குறித்த தகவல்:

-விளம்பரம்-

இது குறித்து சோஷியல் மீடியாவில் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டுகளை குவித்து இருந்தார்கள். நியூயார்க்கில் உள்ள இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டகிரேடிவ் நியூட்ரிஷனால் நடிகை ரம்யா ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளராக சான்றிதழ் பெற்று இருக்கிறார். தற்போது இவர் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழி நடத்துவதற்கும் தகுதியானவர். அதே போல் இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் உடல் எடை சம்பந்தமான பல குறிப்புகளை பகிர்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

ரம்யா பதிவு:

இப்படி இருக்கும் நிலையில் ரம்யா தன்னுடைய இன்ஸ்டாவில் கோபமாக போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாக தொழில்நுட்பத்தில் புதிய விஷயம் வந்தால் அது நல்ல விஷயங்களுக்கு எவ்வளவு பயன்படுகிறதோ அதேபோல் கெட்ட விஷயங்களுக்குமே பயன்பட்டுக் கொண்டிருக்கின்றது. அப்படித்தான் இந்த ஏஐ தொழில்நுட்பத்தால் நிறைய பிரச்சனை வருகிறது. இதை நல்ல முறையில் பயன்படுத்துவதை விட்டுட்டு ஆபாசமாக ஒருவரின் புகைப்படத்தை மாற்றுவது, குரல்களில் மாற்றம் செய்து வெளிவிடது என்ற நிலைமை அதிகரித்து கொண்டு வருகிறது.

ரம்யா கோபப்பட்ட காரணம்:

அந்த வகையில் தற்போது தொகுப்பாளினி ரம்யாவின் வீடியோவையும் அப்படிதான் முறைகேடாக மாற்றி வெளியேற்றி இருக்கிறார்கள். இதனால் தான் ரம்யா கோபமாக பதிவு போட்டு இருக்கிறார். அதில் அவர், இது மூன்றாவது முறை என்னுடைய வீடியோவை மூலம் தவறாக பயன்படுத்துகிறார்கள். இது உண்மையிலேயே சட்டத்திற்கு புறம்பானது. என்னுடைய தனிப்பட்ட உரிமைகளை மீறும் வகையில் மோசடியான செயல் நடைபெறுகிறது. அது இப்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீங்கள் சட்ட நடவடிக்கை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news