கடவுள் நம்பிக்கையே இல்லாத கமல், கோவில் கட்ட 10ஆயிரம் கொடுத்த கதை – அதுவும் யாருக்கு தெரியுமா?

0
155
- Advertisement -

கடவுள் நம்பிக்கை இல்லாத கமலஹாசன் கோவில் கட்ட பணம் கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர். இவர் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது.

- Advertisement -

கமல்-கடவுள் இடையே தொடர்பு:

மேலும், இவர் படங்களில் நடித்து கொண்டு வந்தாலும், அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்போது இவர் நாடாளுமன்ற தேர்தலுக்காக மும்முரமாக திமுகவுடன் கூட்டணி வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க கமலஹாசன் கடவுள் நம்பிக்கை அற்றவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தன்னுடைய படங்களில் கூட கடவுள் இல்லை என்று தான் பேசுவார். நிஜத்திலுமே கடவுள் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.

கமல் கொடுத்த விளக்கம்:

இந்த நிலையில் இவர் கோயில் கட்ட பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலருமே கேள்வி எழுப்பி இருந்தார்கள். இது தொடர்பாக பிரபல நாளிதழில் கமல் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் அவர், நான் சினிமாவில் நடிகனாக வளர்ந்த ஆரம்ப காலத்தில் கோயில் கட்ட பணம் வேண்டும் என்று கிருபானந்த வாரியார் வீடு வீடாக சென்றிருந்தார். அப்படித் தான் அவர் என்னிடமும் வந்து கேட்டார்.

-விளம்பரம்-

பணம் கொடுத்த காரணம்:

அப்போது அவர், நீங்கள் யார்? இப்போது என்னவாக இருக்கிறீர்கள் என்றெல்லாம் எனக்கு தெரியும். அன்று என்னிடம் விபூதி வாங்கிய நீங்கள் இன்று வேறு மாதிரி பேசலாம். ஆனால், இருவரும் அன்பை தான் பேசுகிறோம். நீங்கள் கோயில் கட்ட நிதி கொடுக்கணும் என்று கேட்டார். நானும் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தேன். அப்போது என்னுடைய ஒரு படத்துக்கான மொத்த சம்பளமே 18 ஆயிரம் ரூபாய் தான். இருந்தாலும், நான் கொடுத்தேன்.

கமல் திரைப்பயணம்:

இதை அறிந்த என்னுடைய நண்பன் சாருஹாசன், என்னடா இது! பேசறது ஒன்னு, செய்யறது வேறொன்றா இருக்கிறது? என்று கேட்டார். அதற்கு நான், அவர் என்ன வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளட்டும். ஆனால், அவர் எனக்குள் தமிழ் கோயில் கட்டியவர். அதற்காகத்தான் பணம் கொடுத்தேன் என்று கூறி இருக்கிறார்.
தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் கமல் பிசியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் கமல் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலஹாசன் அவர்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை அடுத்து மணிரத்தினத்துடன் இணைந்து கமலஹாசன் பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement