அஜித் மனைவி ஷாலினி குறித்து பதிவிட்டு பல்ப் வாங்கிய யாஷிகா – காரணம் என்ன பாருங்க.

0
743
yashika
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் யாஷிகா அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார். மேலும், யாஷிகா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். சோசியல் மீடியாவில் ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தும் தான் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டும் வந்தார்.

- Advertisement -

யாஷிகாவுக்கு நடந்த கோர விபத்து:

பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அந்த விபத்தில் யாஷிகாவின் தோழி அநியாயமாக பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

யாஷிகா உடல் நிலை:

பின் யாஷிகா ஆனந்த் தன் உடல் நலம் குறித்து அடிக்கடி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். சமீபத்தில் தான் யாஷிகா ஆனந்த் வீடு திரும்பி இருந்தார். மேலும், குணம் அடைந்த யாஷிகா ஆனந்த் முதன் முதலாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார். அதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு கடை நிகழ்ச்சிக்கு கூட யாஷிகா ஆனந்த் கையில் வால்கிங் ஸ்டிக்குடன் நடந்து வந்து இருந்தார்.

-விளம்பரம்-

வாய்யா சாமி பாடலுக்கு யாஷிகா போட்ட ஆட்டம்:

அதுமட்டுமில்லாமல் யாஷிகா சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கிறார். இதில் அடிக்கடி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா ஆடியிருந்த வாய்யா சாமி என்ற பாடலுக்கு யாஷிகா நடனமாடி வீடியோ பதிவிட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்து. இப்படி உடல்நலம் தேறிய யாஷிகா ரசிகர்கள் மத்தியில் நல்ல விதமாக பேசப்பட்டு வரும் நிலையில் யாஷிகாவின் ட்வ்ட் ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது.

யாஷிகா பதிவிட்ட டீவ்ட்:

அப்படி என்ன யாஷிகா பதிவிட்டு இருக்கிறார் என்றால், அஜித்தின் மனைவி ஷாலினி அவர்களின் பெயரில் ஒரு போலி ட்விட்டர் அக்கவுண்ட் இணையத்தில் பரவி இருந்தது. இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. ஆனால், யாஷிகாவுக்கு இது போலி கணக்கு என தெரியாமல் welcome mam என்று பதிவிட்டு இருந்தார். உடனே அது போலி கணக்கு என அஜீத்தின் மேனேஜர் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் யாஷிகாவை ட்ரோல் செய்து கிண்டல் கேலியுமாக கமெண்ட் போட்டுவருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் அந்த போலி கணக்கு நீக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement