ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் பார்வதியாக ஷாபனாவும், ஆதியாக ஆபீஸ் கார்த்தியும் நடித்து வருகின்றனர். இந்த தொடரின் மூலம் ஷாபனாவிற்கு கடந்த ஆண்டின் பிரபலமான சீரியல் முகம் என்ற விருதும் கிடைத்து.
இந்த நிகழ்ச்சியில் இவர்களது கெமிஸ்ட்ரியை பார்த்து இவர்கள் இருவரும் நிஜ வாழ்கை ஜோடியாக மாற வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால், கார்த்திக் கல்லூரி படிக்கும் போதே யாசினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதையும் பாருங்க : திருமணமான கார்த்திக்கை காதலிக்கிறாரா செம்பருத்தி தொடர் நடிகை ஷபானா..!அவரே சொன்ன ரகசியம்..!
ஆனால், சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் கார்த்திக் மற்றும் ஷபவானிற்கு திருமணம் நடைபெறுவது போல ஒரு எபிசோட்நேற்று ஒளிபரப்பானது.
இதில் பிரச்சனை என்னவெனில் இந்த திருமணத்தை நிஜ திருமணத்தை போல கொண்டாடி ஜி தமிழ் தொலைக்காட்சியில் பணிபுரியும் அத்தனை கலைஞர்களையும் வரவழைத்து கோலாகாலமாக கொண்டாடியுள்ளனர். இதனை கண்ட ரசிகர்கள் ஏற்கனவே விஜய் டிவியில் வந்த சரவணன் மீனாட்சி செந்தில், கலக்கப்போவது யாரு நவீன் போன்றவர்கள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதற்கு விஜய் டிவி மாமா வேலை பார்த்தது தற்போது நீங்களும் இப்படி ஆரம்பித்துவிடீர்கள் என்று கழுவி ஊற்றி வருகின்றனர்.