கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நுழைவு வரி விலக்கு கேட்டு விஜய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அதனை முதல்வர் நிவாரண நிதியாக செலுத்த முடியாது என்று விஜய் தரப்பு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டின் போது கூறி இருந்தது. இப்படி ஒரு நிலையில் தனுஷும் தனது சொகுசு காருக்கு நுழைவு வரி விளக்கு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ் மற்றும் இயக்குனர் ஷங்கரிடம் மட்டும் தான் இந்த கார் இருக்கிறது.
நடிகர் தனுஷ் 2015 ஆம் ஆண்டு இந்த காரை வாங்கினார். முக்கியமான விசேஷங்களுக்கு மட்டும் தான் இந்த காரை தனுஷ் பயன்படுத்துவர்.இப்படி ஒரு நிலையில் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உத்தரவிட்டது.
இதையும் பாருங்க : கால் தவறி கீழே விழுந்த சேரன், தலையில் பலத்த காயம், கொட்டிய ரத்தம் – வெளியான வீடியோ.
இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் நீதி மன்றத்தில் வந்த போது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு தள்ளிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது. விஜய்யின் வழக்கில் வெளுத்து வாங்கிய ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனுஷ் வழக்கிலும் தீர்ப்பு வழங்க இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் இந்த வழக்கில் தனுஷ் தரப்பை வெளுத்து வாங்கியுள்ளார் நீதிபதி, பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக வெறும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள். ஒரு சோப்பு வாங்கும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள் யார் வழக்கு தொடர்ந்தாலும் தான் யார்? என்ன தொழில் செய்பவர் என்பதை மனுவில் தெரிவிக்க வேண்டும். தான் ஒரு நடிகர் என்பதை மறைத்தது குறித்து தனுஷ் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கூறியுள்ளார் நீதிபதி.
ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையில் வந்த உத்தரவுப்படி, பாதித்தொகையை செலுத்திவிட்டு வாகனத்தைப் பதிவு செய்துகொள்ளலாம் என்றும், வழக்கு இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி, ரூ. 60.66 லட்சம் நுழைவு வரியில் ரூ.30.33 லட்சம் தனுஷ் தரப்பில் செலுத்தப்பட்டு வாகனத்தை பதிவுசெய்து பயன்படுத்தி வருகிறார்.. இப்படி ஒரு நிலையில் அவர், ரூ.30.3 லட்சம் வரிபாக்கி செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரிபாக்கியை இன்னும் 48 மணிநேரத்துக்குள் கட்ட நீதிமன்றம் கெடு விதித்திருக்கிறது.