சந்தானம் பட நடிகை ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் விஷாகா சிங். இவர் நடிகை மட்டும் இல்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
இவர் 2010 ஆம் ஆண்டு அசுதோசு குவாரேக்கரின் இயக்கத்தில் வெளியான கெலெயின் ஊம் சீ சான் சே என்ற திரைப்படத்தில் அபிசேக் பச்சன் மற்றும் தீபிகா படுகோன் உடன் இணைந்து நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நடித்ததற்காக 2010 ஆம் ஆண்டு சிறந்த திருப்புமுனை நடிப்பிற்காக வழங்கப்படும் சிடார்டசுட்டு விருது விசாகா சிங்கிற்கு வழங்கப்பட்டது.
விஷாகா குறித்த தகவல்:
மேலும், இவர் தமிழில் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், தமிழில் இவருக்கு வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. அதனை அடுத்து இவர் தன் தந்தையின் நிறுவனத்தை கவனித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் nft தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட விஷாகா :
அது மட்டும் இல்லாமல் நடிகை விஷாகா மேடைப் பேச்சாளராகவும் திகழ்கிறார். அதிலும் உலக அளவில் பல கான்ஃபரன்ஸில் இவர் பங்கேற்று இருக்கிறார். இந்த நிலையில் நடிகை விசாகா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீப காலமாகவே நடிகை விஷாகா உடல்நிலை சரி இல்லாமல் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
விஷாகா பதிவிட்ட புகைப்படம்:
தற்போது இவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை விசாகா சிங் சோசியல் மீடியாவில் பகிர்ந்து ‘இல்லை, நான் நீண்ட நேரம் கீழே மற்றும் வெளியே இருக்க முடியாது. இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் சில விபத்துக்கள் மற்றும் உடல் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்தேன். கோடை காலத்தில் ஆரோக்க்கியயகமாக மீண்டு வருவேன்.
ஏப்ரல் மாதம் எப்போதும் எனக்கு உண்மையான புத்தாண்டாகவே இருந்தது. ஒருவேளை இது புதிய நிதியாண்டு என்பதால், அல்லது இது எனது பிறந்த மாதத்திற்கான முன்னுரையாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும். அதற்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம் என்றெல்லாம் பதிவிட்டு இருக்கிறார்கள்.