தேசிய விருது பெற்றும் கிடைக்காத சினிமா வாய்ப்பு, இரண்டு ஆண்டு மட்டுமே நீடித்த திருமணம் – இன்று பிறந்தநாள் காணும் சுகன்யாவின் அறிந்திராத பக்கம்.

0
524
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. இவர் சென்னையை சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் ஆர்த்தி தேவி. இவர் தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு “புது நெல்லு புது நாத்து ” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சின்னகவுண்டர், கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, கேப்டன், வண்டிச்சோலை சின்ராசு, மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ், மகாபிரபு, இந்தியன், சேனாபதி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இந்தியன் படத்தில் சுகன்யா வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் இவரை எல்லோரும் லேடி கமல் என்று பெயர் வைத்து அழைத்திருந்தார்கள். மேலும், இவர் கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று பல முன்னனி நடிகர்களுடனும் நடித்து இருந்தார். அதோடு இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருந்தார். நடிப்பையும் தாண்டி நடிகை சுகன்யாவிற்கு பரதநாட்டிய கலை மீது மிகுந்த ஆர்வமும் உண்டு.

- Advertisement -

சுகன்யாவின் திரைப்பயணம்:

மேலும், நடிகை சுகன்யா அவர்கள் திரைக்கு வருவதற்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் பெப்ஸி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி இருந்தார். அதன் பிறகு சன் டிவியில் தான் அந்த நிகழ்ச்சியை உமா தொகுத்து வழங்கி இருந்தார். அதோடு இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழாவிலும் பக்தி ஆல்பங்களை வெளியிட்டு இருக்கிறார். பின் இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தனது நடிப்புத் திறமைக்காக பல முறை பிலிம்பேர் விருதுகளை வாங்கியிருக்கிறார்.

சுகன்யா குடும்பம்:

இப்படி சினிமா உலகில் உச்சத்தில் இருந்த நடிகை சுகன்யா அவர்கள் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜ கோபலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் அமெரிக்காவில் செட்டில் ஆனார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணமான ஓராண்டிலேயே சுகன்யா விவாகரத்து கோரி நீதி மன்றத்தை நாடினார். பின் 2004 ஆம் ஆண்டு சுகன்யா விவாகரத்து பெற்றார். தற்போது சுகன்யா தன் மகளுடன் இருக்கிறார். மேலும், சமீப காலமாகவே சுகன்யாவின் மறுமணம் குறித்த செய்திகள் தான் சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

சுகன்யா அளித்த பேட்டி:

இந்நிலையில் இது குறித்து சுகன்யா பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், ஒரு பெண் திருமணம் ஆகி கணவருடனான உறவு சரியாக பொருந்தவில்லை என்றால் அந்தப் பெண் அதிலிருந்து விலகி விடுவது தான் நல்லது. இந்த சமூகத்துக்காக கஷ்டப்பட்டு எல்லாத்தையும் சகித்துக் கொண்டு போவதால் தான் பல தற்கொலைகள் நடக்கிறது. சமூகத்தை எதிர்க்க துணிவு இருந்தால் நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து பெறலாம். என் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது. நான் விண்ணப்பித்து பல ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தான் எனக்கு விவாகரத்து கிடைத்தது.

மறுமணம் குறித்து சொன்னது:

மறுமணம் என்ற எண்ணம் எனக்கு இதுவரைக்கும் வந்ததில்லை. அதற்காக மறுமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் சொல்லவில்லை. இன்னும் இரண்டு மாதங்களில் எனக்கு 50 வயது ஆக இருக்கிறது. இதற்குப் பிறகு திருமணம் செய்து குழந்தை பிறந்தால் அந்த குழந்தை என்னை அம்மா என்று கூப்பிடுமா? பாட்டி என்று கூப்பிடும்மா? என்று குழப்பமாக இருக்கிறது. இது சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயம் என்றாலும் நடைமுறையில் சில விஷயங்களை எண்ணிப் பார்க்கத்தான் வேண்டி இருக்கிறது. வாழ்வில் நமக்கு அனைத்து நிலைகளிலும் ஒரு துணை வேண்டும். மறுமணம் செய்வேனோ? இல்லையோ? என்பதை என்னால் சொல்ல முடியாது. என் வாழ்வில் என்ன நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது அது நடக்கட்டும் அவ்வளவுதான் என்று கூறியிருந்தார்.

Advertisement