அர்ச்சனாவிற்கு டைட்டில் பட்டம் கொடுத்தது குறித்து கானா பாலா விமர்சித்து பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்கள் கடந்து சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்திருந்தார்கள். இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த சண்டை எல்லாம் மிகப்பெரிய அளவில் விவாதமாகவே சோசியல் மீடியாவில் பேசப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா, நான்காம் இடத்தை தினேஷ், ஐந்தாம் இடத்தை விஷ்ணு பிடித்து இருக்கிறார்கள்.
பிக் பாஸ் 7:
மேலும், டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட் மற்றும் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இதுவரை வந்த சீசன்களிலேயே வைல்ட் கார்ட் மூலம் நுழைந்து ஒரு நபர் வெற்றி பெற்றது இல்லை. இதுதான் முதல் முறை என்றும், அர்ச்சனா தான் அந்த சாதனையை செய்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
அர்ச்சனா குறித்த விமர்சனம்:
மேலும், அர்ச்சனா வெற்றி பெற்றதை பலர் கொண்டாடினாலும் சில பிக் பாஸ் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிகழ்ச்சியில் அவர் என்ன கன்டென்ட் தந்தார்? அவர் தன்னை பிரமோட் செய்ய ஆட்களை தயார் செய்து வைத்துவிட்டு போயிருக்கிறார். இதனால் இவருக்கு எப்படி டைட்டில் பட்டதை கொடுக்கலாம்? என்றெல்லாம் பயங்கரமாக விமர்சித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் அர்ச்சனா குறித்து கானா பாலா அளித்திருக்கும் பேட்டியில், பிக் பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா என்னதான் செய்தார்? என்ன எஃபெக்ட் கொடுத்தார்? ஒரு சின்ன பிரச்சனை என்றால் கூட அழுது கொண்டே இருப்பார்.
கானா பாலா பேட்டி:
சண்டை வந்தாலும், பேசினாலும் அழுது கொண்டிருந்தார். நாலு வாரம் அதை வைத்து தான் அழுது கொண்டிருந்தார். இதுக்கு பெயர் எபெக்ட்டா? முதல் நாளில் இருந்தே அவர் அழ தொடங்கி விட்டார். அவருக்கு ஆட, பாட, நடிக்க, பேச எல்லாமே தெரியும். எல்லா டெஸ்ட் எடுத்து தான் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். பின் எதற்கு தெரியாதா? இடம் போல் அழணும். அர்ச்சனா, எனக்கு சமைக்க தெரியாது என்று சொல்வதெல்லாம் சரியா? எனக்கு மட்டும் என்ன சமைக்க தெரியுமா.
I believe #GanaBala didn't watch the show at all after coming out. He is not part of SM either 🥱#Archana alaratha thavira onnum pannalayam.did he see #Maya cooking?
— BB Mama (@SriniMama1) January 20, 2024
Any thoughts?#BiggBossTamil7#BiggBoss7Tamil#BB7QueenArchana#BB7TitleWinnerArchana pic.twitter.com/jhWrqP7m2M
அர்ச்சனா குறித்து சொன்னது:
நான் பாத்திரம் விலக்கினேன், காய்கறி கட் பண்ணினேன், சாதம் வடித்தேன். சாதம் எல்லாம் பெண்கள் தான் பொறுப்பாக செய்வார்கள் என்று நான் ஒதுங்கி விட்டனா? எல்லாமே தான் செய்தேன். எனக்கு எதுவும் தெரியாது என்று ஒதுங்கி உட்கார வில்லை. ஆனால், எனக்கு ஒன்னும் தெரியவில்லை என்று சொன்னார். அவர் எனக்கு எதிரி இல்லை. அதேசமயம் அவர் அழுததை தவிர வேற ஒண்ணுமே பிக் பாஸ் வீட்டில் செய்யவில்லை என்று கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார். இப்படி கானா பாலா பேசியிருக்கும் வீடியோவை பார்த்த அர்ச்சனாவின் ரசிகர்கள் கானா பாலாவை தாக்கி திட்டி வருகிறார்கள்.