தங்கம் விற்கிற விலைக்கு இவ்வளவு நகை சீதனமா? பயில்வான் ரங்கநாதன் கொடுத்த பகீர் தகவல்

0
310
- Advertisement -

நடிகர் பிரேம்ஜியின் மனைவி குறித்து பயில்வான் ரங்கநாதன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் பிரேம்ஜி அமரன். இவர் சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட் பிரபுவின் தம்பி ஆவார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகரும் ஆவார். மேலும், எல்லோரும் பிரேம்ஜிக்கு திருமணம் எப்போது? ஏன் நடக்கவில்லை? என்று பல கேள்விகள் கேட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

தற்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இப்போது பிரேம்ஜிக்கு திருமணமாகி உள்ளது.
திருமணத்திற்கு முன் வெங்கட் பிரபு, எங்கள் குடும்பத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. “பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?” என்ற உங்கள் கேள்விக்கு கல்யாணம் வரும் ஒன்பதாம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார்.

- Advertisement -

பிரேம்ஜி திருமணம்:

இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமண பத்திரிகையை பொதுவெளியில் பகிர்ந்து விட்டார். வைரல் ஆக்குங்க. எப்படி கல்யாணம் பத்திரிகை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இல்லை. எங்களுடைய பிரவேசியை மதித்து, இருந்த இடத்திலிருந்து மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார். அதற்கேற்ப இவர்களுடைய திருமணம் சில தினங்களுக்கு முன் திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் நடந்தது.

மணப்பெண் குறித்த தகவல்:

இவர் இந்து என்ற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டார். இவர் சேலத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இது காதல் கல்யாணம் என்றும் தகவல்கள் வெளிவந்தது. இந்து தான் முதலில் பிரேம்ஜி இடம் காதலை சொல்லி இருக்கிறார். அதற்குப் பிறகுதான் இருவருமே வீட்டில் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், இவர்களின் திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

பயில்வான் ரங்கநாதன் பேட்டி:

இந்த திருமணத்தில் நடிகர் ஜெய், வைபவ், பாடகர் கிரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போது திருமணத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் வீடியோகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள் . இந்த நிலையில் பிரேம்ஜி மனைவி குறித்து பயில்வான் ரங்கநாதன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் அவர், பிரேம்ஜி மனைவி இந்து பிராமண வீட்டு பெண்.

பிரேம்ஜி மனைவி குறித்து சொன்னது:

இதனாலே இவர்களுடைய திருமணம் பிராமண முறை தான் நடைபெற்றது. கங்கை அமரன் திருமணத்தில் கலந்து கொண்டிருந்தாலும் வெங்கட் பிரபு தான் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைத்திருந்தார். பிரேம்ஜியும் அவருடைய மனைவிக்கு 15 வயது வித்தியாசம். இந்து தான் பிரேம்ஜியை துரத்தி துரத்தி காதலித்து இருந்தார். இந்துவுக்கு ஆயிரம் சவரன் தங்க நகையை சீதனமாக கொடுத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கூறியிருக்கிறார். இப்படி இவர் கூறியதை பார்த்த நெட்டிசன்கள், தங்கம் விற்கும் விலையில் இவ்வளவு சவரனா! உருட்டுக்கு ஒரு அளவில்லையா என்றெல்லாம் பயில்வானை விமர்சித்து கிண்டலடித்து வருகிறார்கள்.

Advertisement