- Advertisement -
நியூஸிலாந்து நாட்டின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள ஒரு மசூதியில் இன்று(மார்ச் 15) நண்பகலில் மர்ம நபர்கள் திடீரென நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் இதில் சுமார் 49 பேர் பலியாகினர்.
-விளம்பரம்-
பள்ளிவாசலில் நுழைந்த அந்த கொடூரன் அங்கு இருந்து அனைவர் மீதும் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளான். அவனுக்கு பயந்து அங்கு இருந்தவர்கள் அனைவரும் பயத்தில் ஓடும் காட்சி நெஞ்சை பதறவைக்கிறது.
- Advertisement -
இந்த தாக்குதலை நடத்திய 28 வயது ஆஸ்திரேலினான பிரெண்டன் டர்ட்டான் மசூதித் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளான். தாக்குதாலை 17 நிமிட வீடியோவாக நேரலையும் செய்துள்ளான். முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஆஸ்திரேலியனான பிரெண்ட்டன் டர்ட்டான் ஒரு வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது.
Advertisement