இருவரும் தங்களுக்கு உள்ள மக்கள் பிரபலத்தினால் வரும் பணத்தின் ஒரு ஒரு பகுதியை எப்போதும் மக்கள் நலம் மற்றும் சமூக சேவையில் தன் ரசிகர் மன்றத்தின் மூலம் செலவிடுவார்கள்.
இதில் அஜித் சற்று வித்யாசம். பல பிரச்சனைகளால் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் பலருக்கு தெரியாமலேயே உதவிகள் பல செய்து வருகிறார். அதே போல் தான் தற்போது விஜய் சேதுபதியும் அஜித்திற்கு அடுத்தபடியாக பலருக்கும் தெரியாமல் பல நற்காரியங்களை செய்து வருகிறார்.
கடந்த பல மாதங்களுக்கு முன்னர் நாடகக்கலைஞர்களுக்கு மரியாத செலுத்தும் நிமித்தமாக அனைவருக்கும் தங்க நாணயம் வழங்கினார். அதே போல் சமீபத்தில், நீட் தேர்வின் கொடூரத்தால் உயிரிளந்த அரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக அம்மாவட்டத்திற்கு 50 லட்சம் கொடுத்து உதவினார். மேலும், பல உதவிகள் வெளியே தெரியாமல் செய்து வருவதாக கூறப்படுகிரது, இதனால் அஜித்திற்கு அடுத்ததாக மக்களுக்கு உதவி செய்யும் நடிகராக விஜய் சேதுபதி இருப்பதாக ரசிகர்கள் பேசிவருகின்றனர்.