கடந்த 2004ஆம் ஆண்டு பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளிவந்த காதல் படத்தில், பரத்துடன் மெக்கானிக் செட்டில் கரட்டாண்டி எனற கேரக்டரில் சின்ன பையன் வருவான் தெரியுமா? அந்த பையன் பெயர் அருண். அவர் தூத்துக்குடியை சேர்ந்தவர். காதல் படத்தில் நன்றாக இயல்பாக நடித்து அனைவரது கவனத்தை யும் ஈர்த்தார்.
அதன் பின்னர் 2005ல் வெளிவந்த தளபதி படமான சிவகாசி படத்தில் நடித்தார். ஆனால், காதல் படத்த்தைப் போன்று பெரிதாக அவருக்கு நடிப்பைக் கொடுக்கவில்லை.
இதையும் படிங்க: கும்கி 2வில் இவர் தான் ஹீரோவாக நடிக்கப்போகிறாராம் ! சரியான சாய்ஸ்- யார் தெரியுமா ?
மீண்டும் ஜெயம் ரவி நடிப்பில் வந்த ‘உனக்கும் எனக்கும்’ படத்தில் நடித்தார். அதன் பின்னர் பெரிதாக அவருக்கு எந்த வாய்ப்பும் வரவில்லை. சில வருடங்கள் சும்மா இருந்தார் அருண்.
பின்னர், 2009ல் காதல்னா சும்மா இல்ல என்ற என்ற ஒரு படத்தில் நடித்தார். இந்த படமும் பெரிதாக அவருக்கு ஈர்ப்பு கொடுக்கவில்லை. காமெடி மட்டுமே தெரியும் என இருந்த அவருக்கு ஓசை வாய்ப்புகள் சுத்தாமக இல்லாமல் போனது.காதல் படத்தினை அடுத்து எந்த ஒரு படத்திலும் அவருக்கேற்ற முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் வரவில்லை.