கன்னடத்தில் மிக பிரபலமான நடிகர் துனியா விஜய். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர் என பல முகங்களை கொண்டு உள்ளவர். இவர் 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் விஜய குமார். இவர் 1999 ஆம் ஆண்டு நாகரத்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் 2013 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் இருந்த கருத்து காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அதற்கு பிறகு 2016 ஆம் ஆண்டு இவர் கீர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இவர் பெரும்பாலும் கன்னட மொழி படங்களில் தான் அதிகம் நடித்து வருகிறார். இவருடைய படங்கள் எல்லாமே ஆக்ஷன், அதிரடி படங்கள் தான். இதனால் இவரை சினிமா உலகில் விஜி, பிளாக் கோப்ரா, துனியா விஜய் என்று தான் கூப்பிடுவார்கள்.
பொதுவாகவே சினிமா பிரபலங்கள் வித்தியாசமான முறையில் தங்களுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். இது வழக்கமான ஒன்று. அதுமட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் தங்களுடைய பிறந்தநாள் போது கேக் வெட்டுவதற்கு பல வித்தியாசமான ஆயுதங்களை கொண்டு கொண்டாடி இருக்கிறார்கள். இது சமீப காலமாகவே நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் பல பிரபலங்கள் சட்ட ரீதியாக பயங்கர பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். தற்போது இதே போல் பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் அவர்களும் தன்னுடைய பிறந்த நாளன்று கேக் வெட்டுவதற்கு ஒரு மிகப் பெரிய வாளை பயன்படுத்தி உள்ளார். இதனால் இவர் தற்போது சட்ட சிக்கலை எதிர் கொண்டு வருகிறார்.
இதையும் பாருங்க : தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபல காமெடி நடிகர் சுனில். இவருக்கு இந்த நோயா?
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தான் பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இவர் தன்னுடைய பிறந்த நாளை நள்ளிரவில் தன்னுடைய வீட்டில் கொண்டாடி உள்ளார். நடிகர் துனியா விஜய் அவர்கள் தன்னுடைய பிறந்த நாள் கேக்கை மிகப் பெரிய வாளை கொண்டு வெட்டி உள்ளார். துனியா விஜய் கேக்கை வாளால் வெட்டும் போது எடுக்கப்பட்ட வீடியோவும், புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி விட்டது. இது எப்படியோ போலீசாருக்கு சென்று உள்ளது. இதனால் டிஜிபி ரோகினி அவர்கள் ஆயுத சட்டத்தின் படி 5 அங்குல விட்டம் கொண்ட ஒரு ஆயுதத்தை பயன்படுத்துவது சட்ட விரோதம் என்று அறிவித்திருந்தார்கள்.
இதனால் நடிகர் துனியா விஜய் அவர்கள் இப்படி கேக் வெட்டும் போது மிகப் பெரிய வாளை பயன்படுத்துவதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் ஒன்று துனியா விஜய்க்கு அனுப்பி உள்ளனர். அந்த நோட்டீஸில் கூறி இருப்பது, மூன்று நாட்களுக்குள் துனியா விஜய் அவர்கள் காவல்துறையிடம் வாளால் கேக் வெட்டியதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். அப்படி விளக்கம் அளிக்கத் தவறினால் அவர் உடனடியாக கைது செய்யப்படுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், தனது செயலுக்கு துனியா விஜய் மன்னிப்பு கோரியுள்ளார்.