சினிமாவில் இதெல்லாம் பயமா இருக்கு – அதனால நடிக்க மாட்டேன். ஓப்பனாக கூறிய சீரியல் நடிகை சரண்யா.

0
1664
nenjam-marapathillai-saranya
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தவறுகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த நெஞ்சம் மறப்பதில்லை தொடர் 358 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது .இந்த தொடரில் சரண்யா என்ற தனது சொந்தப் பெயரிலேயே நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சரண்யா தொரடி சுந்தர்.

-விளம்பரம்-

சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்த இவர், தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்தார்.ஆரம்பத்தில் கலைஞர் செய்திகளுக்கு செய்தி நிருபராக இருந்து வந்த இவர். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். ஆனால் அந்த தொலைக்காட்சியிலும் இரண்டு மாதங்கள் மட்டுமே பணியாற்றினார் .பின்னர் ஜீ தமிழ் புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக பணியாற்றினார்.

- Advertisement -

மேலும், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சினிமா பிரபலங்களை நேர்காணல் செய்யும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் சரண்யா. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த போதே இவருக்கு ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

 சரண்யா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்து இருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் சினிமாவில் நடிப்பது குறித்து கேட்ப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நிறைய நல்ல கதைகள் வந்தது. ஆனா, எனக்கு ஏனோ சினிமா செட் ஆகாதுன்னு தோணுது. சினிமா மூலமா கிடைக்கக்கூடிய புகழும் பணமும் என்னை பயமுறுத்துது. கதை கேக்குறது, புதுப்புது டீம் கூட வொர்க் பண்றது, பட ரிசல்ட்டுக்காக வெயிட் பண்றது இது எல்லாம் எனக்கு செட் ஆகாது. அதனால, எனக்கு இதுவே போதும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement