அப்பாவானார் சுந்தரபாண்டியன் பட நடிகர் சௌந்தரராஜன் – கையில் மரக்கன்றுடன் கைக்குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம்.

0
383
soundararaja
- Advertisement -

தமிழ் ஒரு சில துணை நடிகர்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகின்றனர். அந்த வகையில் நடிகர் சௌந்தர்ராஜன். தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான நடிகர் சசி குமார் நடித்த “சுந்தரபாண்டியன் ” படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர நடிகர் சௌந்தரராஜன்.குணசித்ர நடிகரான சௌந்தரராஜன் சுந்தரபாண்டியன் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பராக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தமிழ்நாடு பாரத் சினி அவார்ட்ஸ் சார்பில், சிறந்த அறிமுக வில்லன் நடிகர் என்று விருதும் வழங்கப்பட்டது .

-விளம்பரம்-

அதன் பின்னர் தமிழில் வெளியான பல்வேறு படங்களில் குணசித்ர நடிகராக நடித்துள்ளார். இவர் தமிழில் வெளியான “ஜிகிர்தண்டா, ரெக்க, தெறி ” போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். பல்வேறு படங்களில் இவரது நடிப்பு மிகவும் கவனிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு இவருக்கும் தமன்னா என்பருக்கும் திருமணம் நடைபெற்றது.

இதையும் பாருங்க : ராஜாக்கண்ணு மனைவிக்கு வீடு கட்டி தருவதாக அறிவித்த லாரன்ஸ், இப்போ சூர்யா செய்துள்ள பேருதவி. என்னன்னு பாருங்க.

- Advertisement -

இந்த நிலையில் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. தன் மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள சௌந்தரராஜன், ஒரு மரக்கன்றுடன் போஸ் கொடுத்துள்ளார். சினிமாவை தாண்டி இவர் பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். நடிகர் சௌந்தரராஜா, மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தனது பிறந்த நாளை கொண்டாடிய சௌந்தரராஜா, செடிகளை நட்டு தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 5வது ஆண்டு தொடக்க விழாவையும் சேர்த்து கொண்டாடினார். அப்போது கூட பல மரக் கன்றுகளை நட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement