1000ரூபாயா இருந்தாலும், 5ரூபாயா இருந்தாலும் – தோழியாக இருந்தாலும் குஷ்பூவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்த பிரபல நடிகை.

0
323
- Advertisement -

தமிழக அரசு வழக்கும் பெண்கள் உதவித்தொகையை பிச்சை என்று விமர்சனம் செய்ததற்கு குஷ்பூ எதிர்புகளை சந்தித்து வரும் நிலையில் குஷ்பூவின் இந்த கருத்திற்கு அம்பிகா பதிலடி கொடுத்துள்ளார். போதைப் பொருள் கடத்தலை திமுக அரசு கண்டிக்க தவறவிட்டதை அடுத்து சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் எல்லாம் நடைபெற்றிருக்கிறது. இதில் குஷ்பூ கலந்து கொண்டு தலைமை தாங்கி இருக்கிறார். பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து, தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கிடம் மட்டும் சுமார் 3000 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

ஆனால், இதைப்பற்றி திமுக கூட்டணி கட்சிகள் ஏதாவது வாய் திறந்ததா? இல்லை. காரணம், அந்த ஜாபர் சாதிக் திமுகவுக்கும் பணம் கொடுத்திருக்கிறார்.இந்த விவகாரம் குதித்து முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார்? தமிழகத்தில் ஏற்கனவே நிறைய பிரச்சனைகள் இருக்கின்றது. இந்த நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு அவர்கள் ஓட்டு போட்டு விடுவார்களா?

- Advertisement -

மேலும், தாய்மார்களின் நீண்ட நாள் கோரிக்கையே டாஸ்மாக்கை இழுத்து மூடுவது தான். தில் இருந்தால் நீங்கள் அதை செய்யுங்கள் பார்க்கலாம். போதை பொருள் பிரச்சனையை நீங்கள் தீர்த்து வைக்கவில்லை.இப்படி குஷ்பூ மகளிர் உரிமை தொகையை பிச்சை என்று கூறிருப்பதால் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. இது குறித்து பலருமே, எப்படி நீங்கள் கூறலாம்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் குஷ்பூவின் இந்த பேச்சை கண்டித்து பேசி இருக்கும் நடிகையும் குஷ்பூவின் தோழியுமான அம்பிகா ‘துவாக இருந்தாலும் சரி… யாராக இருந்தாலும்.. எந்த கட்சியாக இருந்தாலும் சரி… ஏதாவது ஒரு உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ.. ஏற்றுக்கொண்டு பாராட்ட வேண்டும். அப்படி பாராட்ட முடியாவிட்டால் எதுவும் பேசக் கூடாது. இழிவான வார்த்தைகளையும் பயன்படுத்தகூடாது. எதற்காக பிச்சை என்ற வார்த்தையை சொல்லணும். 5 ரூபாய் கூட அவர்களுக்கு உதவும்’ என்று பத்திட்டுள்ளார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள குஷ்பூ, உண்மை எப்படி இப்படி பயத்தை கிளப்பிவிடும்னு நான் நினைக்கல. நான் பேசிய பழைய வீடியோவை எல்லாம் எடுத்து போட்டு வராங்க. நான் சொன்ன விஷயத்தை பெண்கள் குறித்து தவறாக பேசியதாக திசை திருப்பிவிட்டார்கள். 1000 ரூபாய் கொடுப்பதை விட தமிழ் நாட்டில் டாஸ்மாக்கை மூடினால் பெண்கள் அதிக பயனடைவார்கள் என்று தான் நான் சொன்னேன்.

நான் தவறு செய்தால் குழந்தையாக இருந்தாலும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன். அரசியல் நாகரீகம், மேடை நாகரீகம், தைரியமாக பேசுவது என்று எல்லாம் சொல்லிக் கொடுத்தது என் ஆசான் கலைஞர் என்பதை மறந்துவிடாதீர்கள்’ என்றும் பேசி இருக்கிறார்.

Advertisement