இப்படியே போன என் குழந்தையோடு சேர்ந்து தற்கொலை தான் பண்ணிக்கணும் – பண மோசடி புகார் குறித்து கண்ணீர் விட்ட திவ்ய பாரதி.

0
395
divyabharathi
- Advertisement -

பண மோசடி புகாரில் துணை நடிகை திவ்யா பாரதி அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் பகலவன் ராஜா. இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் இவர் கவிதைகள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார். மேலும், இவர் சினிமாவில் நடிப்பதற்காக ஏஜென்ட் ஒருவரின் மூலம் திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பை சேர்ந்த திவ்யா பாரதி என்பவர் அறிமுகமாகி இருக்கிறார். இவர் உள்ளூர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும், ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இதனையடுத்து இவரை வைத்து கவிதைத் தொகுப்பினை வீடியோவாக எடுத்து வெளியிட்டிருக்கிறார் பகலவன் ராஜா. இதை தொடர்ந்து திவ்யபாரதி பகலவன் ராஜாவை அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். பின் திவ்யா பாரதி தன்னுடைய குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள பகலவன் ராஜா வீட்டிற்கு சென்று குடும்ப ரீதியாக நட்பாக பழகி இருக்கிறார். அதோடு அவரை திருமணம் செய்வதாக கூறி பல தவணைகளில் பணம் வாங்கியிருக்கிறார். இவர் 50 லட்சம் பணமும், 10 சவரன் தங்க நகைகளையும் வாங்கி இருக்கிறார்.

- Advertisement -

திவ்யா பாரதி ஏமாற்றிய வாங்கிய பணம்:

அது மட்டும் இல்லாமல் தனியாக வீடு எடுத்து அதற்குத் தேவையான பர்னிச்சர் உள்ளிட்ட பல பொருள்களை 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பகலவன் ராஜா செலவு செய்திருக்கிறார். ஆனால், திவ்ய பாரதிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பகலவன் ராஜா திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து திவ்ய பாரதி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி திவ்யபாரதி ஏற்கனவே பல நபர்களுடன் தொடர்பில் இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

திவ்ய பாரதி அளித்த புகார்:

இதனை அடுத்து இந்த வழக்கில் இருந்து தப்பிக்க பகலவன் ராஜா தான் தன்னை ஏமாற்றி விட்டார் என்றும், படத்தில் நடிக்க வைப்பதாக கூறி 10 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியதாக திவ்யபாரதி புகார் அளித்து இருக்கிறார். ஆனால், திவ்யபாரதி இடம் தான் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்றும் அவரிடம் தான் நான் பணம் கொடுத்து ஏமாந்து இருக்கிறேன் என்றும் பகலவன் ராஜா கூறியிருக்கிறார். இதுதொடர்பாக திவ்யபாரதி-ராஜா பேசிய உரையாடல் ஆடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் நடிகை திவ்யபாரதி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, கொரோனா காலகட்டத்தில் நடிக்க வாய்ப்பு இல்லாததால் கவிதையை எழுதி தருகிறோம் நடித்து தாருங்கள் என்று ராஜா கூறியிருந்தார்.

-விளம்பரம்-

திவ்ய பாரதி அளித்த பேட்டி:

நானும் குடும்ப சூழ்நிலைக்காக ஒத்து கொண்டேன். ஒரு கவிதை நடித்து தந்தால் 20 ஆயிரம். அதே மாதிரி என்பது ஆயிரம் ரூபாய்க்கு கவிதை நடித்து தந்தேன். ஒரு நட்பு ரீதியாக தான் எங்களுக்குள் பழக்கம் இருந்தது. ஆனால், அவர்களிடம் நான் 30 லட்சம் ரூபாய் பணம், பத்து பவுன் நகை ஏமாற்றி விட்டேன் என்று சொல்வதெல்லாம் பொய். 2 வருடமாக பழகியவர்களுக்கு எனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருப்பது என்பது கூடவா தெரியாது? இதெல்லாமே அவர்களுடைய ஏமாற்றுவேலை. அவர்கள் நடிக்கும்போது எனக்கு உடல் ரீதியாக தொல்லை கொடுத்தார்கள். ஏன் இதை நீங்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை என்று சொல்லலாம்.

நியாயம் வாங்கி தாருங்கள் :

ஆனால், இந்த துறையில் இருப்பவர்களுக்கு இது போன்ற பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என நான் கடந்து தான் வந்தேன். அவர்கள் எங்களுடைய ஆசைக்கு இணங்கவில்லை என்றால் உன்னை வாழ விட மாட்டோம் என்று சொன்னார்கள். அதேபோல தற்போது சோசியல் மீடியாவில் என்னை பற்றி தவறாக சித்தரித்து வருகிறார்கள். இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருக்கிறேன். காவல்துறையும், மீடியாவும் தான் எனக்கு நியாயம் வாங்கி தர வேண்டும். ஒரு தனி பெண்ணாக ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் பக்கம் இருக்கும் நியாயத்தை பேசி எனக்கு நீதி வாங்கித் தாருங்கள் என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

Advertisement