பறவைகளின் எச்சம் என்ன செய்யும் ? மனிதர்களுக்கு அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும். இதோ முழு விவரம்.

0
794
meena
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் மீனாவின் கணவர் இறந்துள்ள சம்பவம் திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. நடிகை மீனா மற்றும் வித்யாசாகர் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். திருமணத்திற்கு பின்னரும் நடிகை மீனா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும், மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர். வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருந்திருக்கிறது. இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

-விளம்பரம்-
meena

இதற்கு காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்த போது ஏற்பட்ட நோய் என்று கூறப்படுகிறது.
அதாவது பெங்களூரில் அவருடைய வீட்டுக்கு பக்கத்தில் நிறைய புறாக்கள் வளர்க்கப்படுகிறது. அதன் அலர்ஜி ஏற்பட்டு சுவாச பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஏற்கனவே இந்த பாதிப்பு இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மீனாவின் கணவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. பின் ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து சிகிச்சை அளித்து வந்தார்கள்.

- Advertisement -

மீனா கணவனின் இறப்பு:

இருந்தும் சிகிச்சை பலன் இல்லாமல் வித்யாசாகர் இறந்து விட்டார். ஆனால், இவரின் இறப்பு ஒட்டுமொத்த செல்லப்பிராணிகள் வளர்க்கும் மனிதர்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும், புறா என்ற அழகிய பறவை இத்தனை நாளும் அமைதியின் சின்னமாக இருந்து வந்தது. ஆனால், இன்றோ அதன் மேல் ஒரு இனம் புரியாத பயம் ஏற்பட்டிருக்கிறது. புறா மட்டுமல்ல லவ் பேர்ட்ஸ், பூனை, நாய் என செல்லப்பிராணிகள் வளர்க்கும் பலரும் பெரும் குழப்பத்திலும், பயத்திலும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். புறா வளர்ப்பு செய்து கொண்டிருந்தவர்கள் கூட என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர் அளித்த பேட்டி:

இந்நிலையில் இதுபற்றி ஹைதராபாத் பிரபல நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர் விஜய் குமார் ஒரு பேட்டியில் கூறி இருந்தது, புறாக்களின் எச்சம் சுவாசம் மூலம் பூஞ்சைத் தொற்றே ஏற்படுத்தக்கூடும். தொட வேண்டும் என்றில்லை காற்றின் மூலம் ஆகவே எச்சங்களின் துகள்கள் பரவி பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால் ஒருவருக்கு நுரையீரல் வீக்கம் ஏற்படும். இதற்கு பெயர் தான் ஹைப்பர்சென்சிடிவ் நிமோனிட்டிஸ். இதற்கு பல மருத்துவர்கள் இதை வைரல் அல்லது வித்தியாசமான நிமோனியா என்று குழம்பிக் கொள்கிறார்கள். இதுபோன்ற பாதிப்புடன் வருபவர்களை கண்டறிய சந்தேகத்தின் பேரில் புறா வளர்ப்பது, புறாக்கள் வீட்டுக்கு அருகே வந்து செல்கின்றனவா? என்று கேட்டுக் கொள்வேன்.

-விளம்பரம்-

நுரையீரல் பாதிப்பு :

நகரங்களில் புறாக்களின் எச்சம் மற்றும் ஏசி குழாய்களில் காணப்படும் பூஞ்சைகள் சேர்ந்து மோசமான நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. புறா எச்சத்திலுள்ள பூஞ்சைகள் உள்ளே சென்று நுரையீரல் திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீக்கம் சுவாசிப்பதை கடினமாக்கும். கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் மீளமுடியாத நுரையீரல் பாதிப்புக்கு வழிவகுக்கும். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாது. புறா எச்சத்தை தவிர, வீட்டில் பிற பறவைகள் வளர்ப்பவர்கள், சுத்தமில்லாத ஏசி, மாடு வளர்ப்பவர்கள், மாவு அல்லது தானிய மூட்டைகளை கையாள்பவர், பேப்பர், பிளாஸ்டிக், பெயின்ட் துறைகளில் உள்ளவர்களுக்கும் நுரையீரல் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.

நநோயின் அறிகுறிகள்:

மூச்சுத் திணறல், வறட்டு இருமல், இறுக்கமான மார்பு, சோர்வு, காய்ச்சல் ஆகியவை ஹைப்பர்சென்சிடிவ் நிமோனிட்டிசின் அறிகுறிகள் தான். இதுவே தீவிரமடைந்திருந்தால் எந்த வேலை செய்தாலும் மூச்சுத் திணறல் உண்டாகும். உடல் எடை இழப்பும் இருக்கும். அரிதாக சிலருக்கு திசுக்களில் நுரையீரல் திசுக்களில் குணப்படுத்த முடியாத வடுக்களை ஏற்படுத்தி விடும். இதனை நுரையீரல் பைப்ரோசிஸ் என்கின்றனர். இழைகள் போன்று வளர்ந்து திசுக்களுக்கு ஆக்சிஜன் செல்வதை குறைக்கும். இதன் அறிகுறியாக கை மற்றும் கால்களின் விரல் முனைகள் பெருத்து காணப்படும். நகங்கள் வளைந்து கீழ் நோக்கி இருக்கும். நுரையீரல் திசு வீக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்திவிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். திசு வீக்கத்தை உண்டு பண்ணும் பொருளை கண்டறிவது சிகிச்சையின் முதல் படி. பின்னர் அதனை நீக்க வேண்டும்.

சிகிச்சை முறைகள்:

தீவிர நுரையீரல் திசு வீக்கம் கொண்டவர்களுக்கு நோயை உண்டாக்கிய பொருளை நீக்கிய பின்னரும் பிரச்னை நீடிக்கும். அவர்கள் பாதிக்கப்பட்ட திசுக்கள் பழைய நிலைமைக்கு திரும்ப வீக்கத்திற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும். வேலை மற்றும் வீட்டு சூழலை முடிந்தால் மாற்றியமைக்க வேண்டும். இது தவிர நுரையீரலை புத்துணர்வாக்கும் பயிற்சிகளை கற்றுத்தருவர். அவை எதுவும் பலனளிக்காத நிலையில் இருப்பவர்களுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். ஹைப்பர்சென்சிடிவ் நிமோனிட்டிஸ் ஏற்பட 150 காரணங்கள் இருந்தாலும், புறாக்களின் எச்சம் முதன்மை காரணமாக உள்ளது. பிற செல்லப் பறவைகளும் இது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே புறாக்கள், பறவைகள் வளர்ப்பவர்கள் அதனுடன் அதிக நெருக்கம் காட்டதீர்கள். அதன் கழிவுகளை சுத்தம் செய்யும் போது என்95 முகக்கவசம் அணிவது அவசியம் என்று பல விஷயங்களை கூறி இருக்கிறார்.

Advertisement