எனக்கு கொரோனா சரியாகிவிட்டது. நிம்மதி பெருமூச்சில் பிரபல நடிகை.

0
23503
olka
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு மேலாக ஒட்டுமொத்த உலகையும் கதி கலங்க வைத்து இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது இந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
Image

- Advertisement -

இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது.

இதையும் பாருங்க : ஊரடங்கு நாளில் தாயுடன் சேர்ந்து டப்பாங்குத்து. சூப்பர் சிங்கர் பிரகதியின் டிக் டாக் வீடியோ.

-விளம்பரம்-

இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். இந்தியாவில் இதுவரை 5 பேர் இறந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா படப்பிடிப்புகள், படம் வெளியீடு, ஐபிஎல் விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட அனைத்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸினால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இந்நிலையில் ஜேம்ஸ்பாண்ட் நடிகை ஓல்கா குரிலென்கா அவர்கள் சமீபத்தில் இந்த கொரோனாவால் பாதிப்படைந்ததாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனை அறிந்த ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் இவர் தற்போது ஒரு தகவலை கூறியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, நான் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணம் அடைந்து விட்டேன். தற்போது எனக்கு ஒன்றும் இல்லை. என்னுடைய உடல்நிலை பலமாக உள்ளது. முன்பு போல் சோர்வாக இல்லை. நான் நன்றாக ஆகி விட்டேன் என்று கூறியுள்ளார். இவர், குவாண்டம் ஆப் சோலஸ், ஒபிலிவியான், மொமன்டம், த ரூம் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பயங்கர சந்தோஷத்தில் உள்ளார்கள்.

சில தினங்களுக்கு முன்பு தான் இந்தியா முழுவதும் அனைத்து மாநில அரசுகளும் பிரதமர் மோடி வேண்டுகோள் படி சுய ஊரடங்கு அமல்படுத்தி இருந்தது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்றும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்து இருந்தது.

Advertisement