சினிமா துறை பொறுத்தவரை நடிகர்களுக்கு பேரும் புகழும் இருக்கும் வரைதான் அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும்.ஆனால் வயதாகி பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் அவர்களில் பலபேர் பரிதாபமான நிலையில்அனாதையாக இருக்கும் பல நபர்களை நாம் பார்திருக்கிரோம்.
அப்படி பட்ட பரிதாபமான நிலையில் தற்போது இருந்துவருகிறார் பாலிவுட் நடிகை பூஜா தட்வால்.பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்காணுடன் இணைந்து நடித்த, இவர் தற்போது உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அவர் அருகில் இருந்து பார்த்துக்கொள்ள கூட யாரும் இல்லாமல் சிகிச்சை பெற்றுவருகிறார்.
1995 இல் வீர்கத்தி என்ற படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் ஹிந்துஸ்தான், சிந்தூர் கி சவுகந்த் போன்ற ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளர்.பின்னர் திருமணமாகி கோவாவில் செட்டில் ஆகிவிட்டார் அங்கு ஓரு சூதாட்ட கிளப்பில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
டி பி எனப்படம் காசநோயால் பாதிக்கப்பட்ட இவர் 15 நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள செவ்ரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டர்.ஆனால் தன்னை மருத்துவமனையில் தனியாக விட்டுவிட்டு தனது கணவரும்,பிள்ளைகளும் சென்றுவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.
தற்போது தன்னிடம் தற்போது ஒரு தேநீர் வங்க கூட பணமில்லை என்றும்,இதனால் நான் நடிகர் சல்மான் கானிடம் உதவி கேட்டுள்ளேன். ஆனால் ,அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஒரு வேளை என்னுடய விடியோவை பார்த்தால் அவர் எனக்கு உதவிசெய்திருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
நடிகை பூஜாவின் இந்த நிலையை அறிந்த ரசிகர்கள் நடிகர் சல்மான் கானை ட்விட்டரில் நடிகை பூஜாவிற்கு உதவிசெய்யுமாறு அறிவுறுத்திவருகின்றனர்.