இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒளிபரப்பாகிறது’சித்தி 2′. முதல் நாள் சர்ப்ரைஸ் என்ன தெரியுமா ?

0
10853
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ராதிகா சரத்குமார். இவர் 80களில் தொடங்கி இன்று வரை இடைவிடாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறி நடித்து வருகிறார். சினிமா துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். இவர் சன் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, சித்தி, வாணி ராணி, செல்வி, அரசி என பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார். மேலும், தொலைக்காட்சி சீரியல் என்றாலே அனைவருக்கும் மனதில் வருவது ஒன்று தான். அது வேற ஒன்னும் இல்லைங்க ராதிகாவின் சித்தி சீரியல். 1999 ஆம் ஆண்டின் இறுதியில் தான் சன் டிவியில் ஒளிபரப்பானது “சித்தி” சீரியல்.

-விளம்பரம்-

இந்த சித்தி சீரியல் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 1999ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை இல்லத்தரசிகள் மட்டுமில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டு பார்க்க வைத்த சீரியல் சித்தி. அதோடு சித்தி சீரியல் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. இந்த சீரியல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடியது. இந்த சீரியலிலை ராதிகா சரத்குமார் அவர்களே தயாரித்து இருந்தார். அது மட்டுமில்லாமல் முதல் முறையாக பட்டி தொட்டி எங்கும் வெற்றி அடைந்த முதல் சீரியலும் சித்தி சீரியல் தான்.

- Advertisement -

இந்நிலையில் 22 வருடங்களுக்கு பிறகு சித்தி 2 சீரியல் இன்று இரவு ஒன்பது மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதனை காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வெள்ளித்திரையில் சாதித்தவர்களால் சின்னத்திரையிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் ராதிகா சரத்குமார். கண்ணின் மணி கண்ணின்மணி என தொடங்கும் பாடலும், சித்தி என ஒலிக்கும் குரலும் மக்கள் மனதில், அனைத்து இல்லத்தரசியின் வீட்டையும் ஆக்கிரமித்து உள்ளது. சின்னத்திரையில் ராதிகா அவர்கள் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறது காரணம் சித்தி சீரியல் தான்.

இந்த சித்தி சீரியல் முதல் பாகத்தில் நடிகர் சிவகுமார் நடித்திருந்தார். தற்போது இவருக்கு பதிலாக இரண்டாவது பாகத்தில் நடிகர் பொன்வண்ணன் நடிக்கிறார். அதாவது சித்தப்பா கதாபாத்திரத்தில் சிவகுமாருக்கு பதிலாக நடிகர் பொன்வண்ணன் நடிக்கிறார். இந்த சித்தி 2 சீரியலை கே.விஜயன் என்பவர் இயக்க உள்ளார். இந்த சீரியலில் ராதிகா, பொன்வண்ணன், ரூபினி, நிஷாந்தி (பானுப்பிரியாவின் தங்கை), டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் சித்தி சீரியல் இன்று முதல் நாள் என்பதால் இன்று மட்டும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று நடிகை ராதிகா சரத்குமார் அறிவித்து உள்ளார். இதனால் ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் சித்தி சீரியலை எதிர்நோக்கி தமிழகம் முழுவதும் காத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், முதல் பாகத்தைப் போலவே சித்தி இரண்டாம் பாகமும் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த காலத்தில் அதாவது டிஜிட்டலின் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் சித்தி சீரியல் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தில் இடம் பெற்றது. தற்போது இருக்கும் நவீன டிஜிட்டல் உலகத்தில் சித்தி சீரியல் வெற்றி அடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement