1980-90 களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் கொடி கட்டி பரந்தவர் ஸ்ரீதேவி. எம் ஜி ஆர்-சிவாஜி காலம் முதல் தற்போது இருக்கும் இளம் நடிகர்கள் வரை நடித்தவர்.இவர் சமீபத்தில் ஷாருக் கான் நடித்த ஸிரோ படத்தில் நடித்துள்ளார்.
தற்போது அந்த படமே இவருக்கு கடைசி படமாக ஆகிவிட்டது.சமீபத்தில் தனது உறவினர் திருமணத்திற்காக துபாய் சென்றுள்ளார் ஸ்ரீதேவி அங்கு அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு காலமாகி உள்ளார்.
இதனை உறுதி செய்துள்ளார் துபாயில் இருந்து இந்தியா திரும்பிய அவரது ஸ்ரீதேவி உறவினர் ஒருவர்.இதனை அடுத்து தென்னிந்திய சினிமா துறை மிகுந்த சோகத்தில் உள்ளது.
ஸ்ரீதேவியின் மறைவிற்கு பல முன்னணி நடிகர் நடிகைகள் சமூவு வலைதளங்களில் தங்களது வருத்ததை பதிவு செய்து வருகின்றனர்.ஸ்ரீதேவியின் உடல் இன்னும் இந்தியா கொண்டு வரபடவில்லை . ஸ்ரீதேவியின் மறைவு உலகிற்கு மிக பெரிய இழப்பு என்பது நம்மால் மறுக்க முடியாது.