கன்னடத்திலும் டிரெண்டான ‘இந்தி தெரியாது போடா’ டி சர்ட். காரணம் இந்த தமிழ் நடிகர் தான்

0
1115
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியை கட்டாய படமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும், தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.பல மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்ற நிலையில், இந்த கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் தற்போது மீண்டும் இந்தி எதிர்ப்பு அரசியல் தலை தூக்க துவங்கி உள்ளது.

-விளம்பரம்-

திமுக போன்ற பல்வேறு கட்சியினர் இந்த இந்தி எதிர்ப்பு பிரச்சனையில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் கூட இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகத்திலும் இந்தி திணிப்பிற்கு எதிராக பிரபலங்கள் பலர் குரல் கொடுத்துள்ளனர். அதற்கு கரணம் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் தான்

- Advertisement -

சமீபத்தில் நடிகை பிரகாஷ்ராஜ் இந்திக்கு எதிரான டி சர்ட் அணிந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். கர்நாடக வரைபடத்துடன் கூடிய அந்த டி சர்ட்டில் இந்தியைத் திணிப்பதை எதிர்த்த வாசகம் இடம் பெற்றுள்ளது. என்னால் எந்த மொழியிலும் பணியாற்ற முடியும். எனது கற்றுக் கொள்ளுதல் என்பது என்னுடைய விருப்பத்திற்குரியது. எனது வேர் மிகவும் ஆழமானது. எனது பெருமை எனது தாய்மொழி. இந்தியைத் திணிக்காதே என்று பதிவிட்டிருந்தார் பிரகாஷ் ராஜ்.

பிரகாஷ் ராஜின் இந்த டுவிட் வைரலானாதை அடுத்து பல்வேறு பிரபலங்களும் இந்த இந்தி தெரியாது போடா டி-ஷர்ட்டை அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.  அந்த வகையில், கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார் மற்றும் தனஞ்செய் ஆகியோரும் தங்களது டி சர்ட் பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர். தமிழகத்தை அடுத்து கர்நாடகாவிலும் இந்தி தெரியாது போடா பஞ்சாயத்து ஆரம்பித்து உள்ளது.

-விளம்பரம்-
Advertisement