இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘அலெக்ஸ்பாண்டியன்’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்காவும் மேலும், மூன்று பெண்களும் நடித்திருந்தனர். இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக மூன்று பெண்கள் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தான் மாடல் அழகியும் நடிகையுமான அகன்ஷா பூரி.
மத்யபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர், முதலில் மாடலிங் துறையில் இருந்து வந்தார் அதன் பின்னர் தமிழில் அலெக்ஸ்பாண்டியன் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். அதன் பின்னர் தமிழில் ‘திஹார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும், மலையாளம், கன்னடம் என்று ஒரு சில படங்களில் நடித்த இவர், பின்னர் சினிமாவில் வாய்ப்பு குறையவே சீரியல் பக்கம் திரும்பிவிட்டார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘விநாயகர்’ என்ற பக்தி தொடரில் பார்வதி தேவியாக நடித்து வந்தார்.
இதையும் பாருங்க : வளர்ந்து வரும் இயக்குனருக்கு வாய்ப்பு. இதுவரை விஜய் இப்படி ஒரு ரோலில் நடித்ததே இல்லை.
விநாயகர் தொடரில் பார்வதி கதாபாத்திரத்தில் பக்தி மையமாக நடித்த இவர் நிஜத்தில் படு கவர்ச்சியான பேர் வழியாக தான் இருக்கிறார். மேலும், மாடல் அழகி என்பதால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு என்றே ரசிங்கர்களும் இருக்கத் செகின்றனர்.
மேலும், சமூக வலைதளத்தில் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்ந்தும் வருகின்றனர். சமீபத்தில் வழக்கம் போல கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விநாயகர் சீரியலில் பக்தி மையமாக நடித்த நடிகையை இது என்று புலம்பி வருகின்றனர்.