இப்படி இருக்கறதுக்கு விஷ ஊசி போட்டு என்ன கொன்னுடுங்க – கேன்சல் பாதிப்பால் சிந்துவிற்கு ஏற்பட்ட பரிதாபம்

0
840
SINDHU
- Advertisement -

எனக்கு விஷ ஊசி போட்டு கொள்ளுங்கள் என்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அங்காடி தெரு நடிகை சிந்து கதறி அழுதி இருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வசந்த பாலன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் அங்காடித்தெரு. இந்த படத்தில் மகேஷ், அஞ்சலி, இயக்குனர் வெங்கடேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படம் பல்வேறு விருதுகளை கூட குவித்து இருந்தது. இந்தப் படத்தில் விலைமாதுவாக இருந்து அதன்பின்னர் நடைபாதை வியாபாரியான குள்ள மனிதரை திருமணம் செய்து கொண்டு சின்னம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சிந்து. இவர் நாடோடிகள், தெனாவட்டு, நான் மகான் அல்ல, சபரி, கருப்பசாமி குத்தகைதாரர், போக்கிரி போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் படங்களில் மட்டும் இல்லாமல் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ அங்காடித்தெரு திரைப்படம் தான். இப்படி ஒரு நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடிகை சிந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தும் குணம் அடையாமல் இருக்கிறார். இந்தப் புற்றுநோயால் இவர் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். இந்நிலையில் இது குறித்து நடிகை சிந்து அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு 2020 ஆம் ஆண்டு கேன்சர் இருப்பது தெரியவந்தது. இதை மார்பகங்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. அப்போதிலிருந்து நான் ஆங்கில மருந்து, நாட்டு மருத்துவம் என எத்தனையோ வைத்தியம் செய்து கொண்டு வருகிறேன். ஆனாலும், என்னுடைய நோய்க்கு தீர்வு கிடைக்கவில்லை.

- Advertisement -

சிந்து அளித்த பேட்டி:

நான் எந்த மருத்துவத்தையும் குறை சொல்லவில்லை. எனக்கு அவர்கள் நன்றாக தான் ட்ரீட்மெண்ட் செய்தார்கள். ஆனால், என்னுடைய உடலுக்கு தான் ஒத்துக் கொள்ளவில்லை. ஆங்கில மருந்துகள் ஒத்துக் கொள்ளவில்லை என்பதனால் நான் சித்த மருத்துவம் செய்தேன். தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் 35 நாட்கள் தங்கி இருந்து நாட்டு மருத்துவ வைத்தியம் எடுத்துக் கொண்டேன். அதனால் எனக்கு மார்பகத்தில் இருந்த புண்கள் ஆரிவிட்டது. இதனால் நான் நன்றாக தான் இருந்தேன். ஆனால், என்னுடைய மருமகன் திடீரென மாரடைப்பால் இறந்த காரணத்தினால் என்னால் அந்த சிகிச்சையை தொடர முடியவில்லை. மேலும், என்னை மூன்று ஆண்டுகளுக்கு ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள். ஆனால், நான் வேலைக்கு சென்றால் தான் எனக்கு சாப்பாடு என்ற நிலைமை இருக்கும் போது எப்படி என்னால் ரெஸ்ட் எடுக்க முடியும். இதனால் நான் வேலை செய்து கொண்டு தான் இருந்தேன்.

புற்றுநோய் குறித்து சிந்து சொன்னது:

அதுமட்டுமில்லாமல் எனக்கு நிறைய நண்பர்களும் உதவி செய்து என்னை காப்பாற்றி வருகிறார்கள். அவர்களால் தான் நான் இப்போது சாப்பிடுகிறேன், பிற செலவுகளையும் பார்த்துக் கொள்கிறேன். எத்தனை நாளைக்கு தான் அவர்களுக்கு நான் பாரமாக இருக்க முடியும் என கருதி தான் நான் சீரியல் வாய்ப்புகளை தேடி சென்றேன். என் நிலைமையை அறிந்து சீரியலிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், என்னால் கஷ்டப்பட்டு நடிக்க முடியாத அளவுக்கு எனக்கு உடல் வலி இருந்தது. மேலும், என் மகளும் வேலையில்லாமல் இருக்கிறார். அவளுக்கு ஒன்றரை வயதில் குழந்தையும் இருக்கிறது. அவர்களையும் நான் தான் பார்த்துக் கொண்டு வருகிறேன். இப்படி தினம் தினம் இந்த புற்றுநோயால் நான் கஷ்டப்படுகிறேன். இதனால் நான் தூங்கும்போது தலையணையால் அழுத்தி என்னை கொன்றுவிடு என்று என் தம்பியிடம் கூறினேன்.

-விளம்பரம்-

வலியால் துடிக்கும் சிந்து:

எனக்கு எந்த மருந்தும் கேட்கவில்லை. எனக்கு முதன் முதலில் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் போய் எனக்கு விஷ ஊசி போட்டு என்னை கொன்று விடுங்கள். தினம் தினம் சாவதற்கு ஒரேடியாக செத்து விடுகிறேன் என்றெல்லாம் அழுது கேட்டேன். அப்போது அவர் எனக்கு கேன்சர் எங்கே எல்லாம் பரவி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள பெட் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று சொன்னார். அதோடு உடலில் புற்றுநோயை கண்டறியும் மெஷின் ஒன்று. உலகத்திலேயே அது நான்கு இடங்களில் தான் இருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ஹைதராபாத், பெங்களூர் என்று சொன்னார். அங்க அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதெல்லாம் ரொம்ப கஷ்டமாம்.

முதல்வருக்கு வைத்த கோரிக்கை:

பண வசதி இருப்பவர்களுக்கு மட்டும்தான் இலவசமாக அந்த சிகிச்சை செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் ஒரு ஒரு நிமிடத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் ஆகுமாம். அதற்காக சிகிச்சை செலவு, நான் தங்குவதற்கு சாப்பிடுவதற்கு என எல்லாவற்றிற்கும் பணம் தேவை. ஆகவே நான் அந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க இருக்கிறேன். இந்த சிகிச்சை பெற அவரிடம் உதவி கேட்க போகிறேன். என் மகளுக்கு அரசு வேலை கொடுத்தால் 27 வயதில் கணவரை இழந்து விட்டு ஒரு குழந்தையுடன் தவிக்கும் என் மகளுக்கு வாழ்வாதாரமாக இருக்கும். நான் இந்த பேட்டி அளித்ததே இது முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு செல்லும் என்பதால் தான். இந்த பேட்டியின் மூலம் நான் முதல்வருக்கு கோரிக்கையும் வைக்கிறேன். தயவு செய்து உதவி செய்யுங்கள் என்று கண்ணீர் மல்க கூறி இருக்கிறார்.

Advertisement