தமிழ் சினிமாவின் பெருமையயை உலக அளவில் கொண்டு சேர்த்தவர்களில் மிக முக்கியமானவர் ஏ.ஆர். ரஹ்மான். இந்தியாவின் ஆஸ்கர் மன்னன் என்று கூட சொல்லலாம். ரஹ்மான் ஒரு படத்திற்கு கமிட் ஆகிறார் என்றால் அதன் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாவே இருக்கும்
பொதுவாக எப்போதும் தன்னை ரஜினி மற்றும் கமல் ரசிகர் எனக் கூறுவார். மேலும், ரஜினி தான் தனக்கு மிகப்பெரிய முன்மாதிரி எனவும் பல பொது மேடைகளில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் அசத்தும் தல அஜித் ! ரசிகர்கள் கொண்டாட்டம் ? தமிழில் முதல்முறை !
சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியியில் அதயே தான் கூறியுள்ளார். ரஜினி – கமல் ஒரு காலத்தில் எப்படி ஒரு துருவங்களாக இருந்தார்களோ அதே போல் தற்போது விஜய் – அஜித் அந்த இடத்தைப் பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தல – தளபதியைப் பற்றி ஒரு பொது மேடையில் ரஹ்மான் பேசியிருப்பது இதுவே முதன் முறையாகும்.