‘தமிழ்ல பேச்சுப்பா’ மனைவியை தொடர்ந்து மேடையிலேயே மகனையும் கலாய்த்த ரஹ்மான்

0
1689
ARRahman
- Advertisement -

மேடையில் ஆங்கிலித்தில் பேசிய தனது மகனை தமிழில் பேச சொல்லி இருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான். இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இரண்டு தலைமுறைகளை கடந்து இவர் என்றும் ஒரு முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார் மேலும் இந்தியாவிற்கு இரண்டு ஆஸ்கார்களை பெற்றுத்தந்த முதல் இந்தியர் என்ற பெருமையும் இவரையே சாரும். சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் மகனும் கலந்துகொண்டார்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி முதலில் சென்னையில் தான் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மழையின் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்தானது. பின்னர் கோவையில் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்படி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மேடைக்கு வந்த தன்னுடைய மகனிடம் பயமா இருக்கா, இல்ல உற்சாகமா இருக்கா, பொண்ணுங்கலாம் பார்த்துட்டு இருக்காங்க என ரகுமான் சொன்னதும் ஆங்கிலத்தில் அமீன் பேசியுள்ளார்.உடனே ஏ.ஆர்.ரகுமான் தமிழ்ல பேசுப்பா என கூற, அங்கிருந்த ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ஏ ஆர் ரஹ்மான் போலவே அவரது மகனும் இசையில் தான் ஆர்வமுள்ளவராக இருக்கிறார். மேலும், இவர் ஒரு சில ஆல்பம் பாடல்களை கூட உருவாக்கி இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முணர்ட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் ஒன்றை பாடி ஒரு நிமிட வீடியோ பதிவாக வெளியிட்டிந்தார் இந்த வீடியோ தற்போது 2மில்லியன் பார்வையாளர்களை தான்னடியுள்ளது. மேலும் இப்பாடலை கேட்டதற்கு அவரது தந்தை ஏ.ஆர். ரகுமானை போல இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

பிரபலமான சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசைக்கலைஞர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் தங்களுடைய பாடல்களை இன்ஸ்டாகிராம் ரீல்ஸிற்காக ஆல்பங்களை வெளியிட்டு வருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட தந்தையிடம் தனது பாடலை அனுப்பி இருக்கிறார். அதனை கேட்ட ரஹ்மான் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்து இருக்கலாம் ‘எதோ மிஸ் ஆகிறது’ என்று கூறியுள்ளார். இதற்கு அமீன் ‘அப்பா, ஏன் எப்போதும் என்னை கேலி செய்கிறீர்கள்’ என்று கேட்டுள்ளார்.

-விளம்பரம்-

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தனியார் ஊடகத்தின் விருது விழாவில் ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டது. . விருது வாங்கிய பிறகு ரகுமான், எல்லா புகழும் இறைவனுக்கே.இந்த விருதை என்னுடைய மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன். என்னுடைய குரலின் முதல் ரசிகை என்னுடைய மனைவிதான் என்று கூறி இருந்தார். இதனை தொடர்ந்து ரஹ்மான் மனைவி பேசிய போது இந்தியில் பேசாதீங்க, தமிழில் பேசுங்க ப்ளீஸ் என்று ரகுமான் கலாய்த்து இருந்தார்.

இதே போல தமிழை வைத்து ரஹ்மான் செய்த இன்னோரு சம்பவமும் இங்கே நினைவிற்கு வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் செந்தமாக கதை எழுதி இசையமைத்த படம் தான் 99. இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடந்து கொண்டிருந்தது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தொகுப்பாளர் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென இந்தி மொழியில் பேச தொடங்கி விட்டார்.

இதையடுத்து வெடுக்கன தலையை திருப்பி இந்தி….. எனக் கேட்ட ஏ ஆர் ரகுமான் சற்றும் யோசிக்காமல் வேகமாக மேடையை வட்டு இறங்கத் தொடங்கினார். பின்பு சிரித்துக்கொண்டே நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே தமிழ் தெரியுமா என்று கேட்டேன் அல்லவா என கூறினார். அடுத்து இதெல்லாம் தமசாக செய்தேன் என்று கூறி நிகழ்சியை ஆரம்பித்தனர். பின்னர் அந்த தொகுப்பாளியும் தமிழிலேயே அந்த நிகழ்ச்சியை தொடர்ந்தார்.

Advertisement