கடவுள் புண்ணியத்தில் தப்பிதேன், ஷாக்கில் இருந்து மீள முடியவில்லை – ARR மகன் போட்ட பதிவு

0
295
- Advertisement -

இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான `வொன்டர் பலூன்’ என்ற நிகழ்ச்சியில் வாசித்துப் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் பல இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.மேலும், இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கி இருந்தார்.

-விளம்பரம்-

இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதோடு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும் அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

ரகுமான் இசைப்பயணம்:

இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் ரகுமான். தற்போது உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக இருக்கிறார். தற்போது இவர் இயக்குநர் மணிரத்னத்தின் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் படத்தில் இசையமைத்து இருக்கிறார். மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமான் மகன் :

கடந்த 1995ஆம் ஆண்டு செரினா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். அதில் கடைசி மகன் தான் அமீன். இவரும் தன்னுடைய தந்தை போல இசையில் ஆர்வம் உள்ளவர். அவர் தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் ஒன்றை பாடி ஒரு நிமிட வீடியோ பதிவாக வெளியிட்டிருக்கிறார். பல மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இதனை தொடர்ந்து தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வளம் வர தொடங்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

ஏ.ஆர்.அமீன் :

ஏ.ஆர்.அமீன் ஓகே கண்மணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். அதற்கு பிறகு ரஜினிகாந்த நடித்த 2.0 போன்ற படங்களில் இவர் சில பாடல்களை பாடியிருக்கிறார். மேலும் சிம்பு நடித்துவரும் பத்து தல படத்திலும் பாடல்களை பாடி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர் பெரும் விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் விபத்து :

அதாவது சமீபத்தில் ஒரு பாடலின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.அமீன். அப்போது அவர்களின் மேலே பல விளக்குகள் கிரேன் உதவியுடன் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இவர் கேமெராவை பார்த்து நடிப்பதடி இருந்திருக்கிறார். இந்த நிலையில் தான் திடீரென அந்த விளக்குகள் கட்டப்பட்ட சாரம் அறுந்து விழுந்திருக்கிறது. ஆனால் நூலிழையில் அவரது குழுவினரும் அவரும் உயிர்தப்பியுள்ளனர்.

இது குறித்து அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை புகைப்படத்துடன் பதிவிட்டு. விளக்குகளை கட்டப்பட்ட அந்த சாரம் சில நொடிகளுக்கு முன்னர் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும், ஆனால் நானும் என்னுடைய குழுவும் சரியான நேரத்தில் தப்பித்து விட்டதாகவும். ஆனால் அந்த அதிர்ச்சியில் இருந்து இனமும் மீளவில்லை என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement