அட்லி இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்க இருப்பதாக உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இந்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். இதில் விஜய்யை வைத்து முதலாக தெறி படத்தை இயக்கி இருந்தார். மேலும், ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக தெறி படம் இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. பின் அட்லீ மெர்சல் படத்தை இயக்கி இருந்தார். இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆக ஆனதே மெர்சல் படத்திற்குப் பிறகு தான்.
அட்லீ திரைப்பயணம்:
பின் மூன்றாவது முறையாக விஜயை வைத்து பிகில் என்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் அவர்கள் ராயப்பன், மைக்கேல் என்று அப்பா,- மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தில் மைக்கேல் கதாபாத்திரத்தை விட ராயப்பன் கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டு இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.
பிகில் படம்:
பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். அதோடு அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஷாருக்கான்-அட்லீ படம்:
இந்த படம் ஒரு வங்கியை ஹீரோ கொள்ளையடிக்கும் கதை அம்சத்தை கொண்டது என்று சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. அதோடு ‘லயன்’ என்ற தலைபில் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் அட்லீ மீண்டும் விஜயை வைத்து படம் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதுஎன்னவென்றால், அமேசான் பிரைம் நிறுவனம் டுவிட்டரில் பிகில் படத்தில் வந்த ராயப்பன் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து படம் எடுங்கள்? என்று அட்லீயிடம் கேட்டிருந்தார்கள்.
அட்லீ போட்ட டீவ்ட்:
இந்நிலையில் இதற்கு அட்லி அவர்கள் பதிலளித்திருக்கிறார். அதில் அவர், ராயப்பன் கதாபாத்திரம் பேசும் செஞ்சிட்டா போச்சு என்ற வசனத்தை பதிவிட்டிருந்தார். இதன்மூலம் விஜய்-அட்லியை வைத்து அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குங்கள் என்று அட்லீயிடம் கேட்டு இருந்த ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.