அவன் இவன் படத்தில் போலீசாக நடித்த நடிகர் திடீர் மரணம் – நடிக்க வரும் முன் இப்படி ஒரு அரசு வேலையில் இருந்தவரா.

0
880
- Advertisement -

பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ராமராஜ் காலமானார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தமிழ் சினிமாவின், முன்னணி இயக்குனரான பாலா  இயக்கத்தில், விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி  வெளியான அவன் இவன் படத்தில் போலீஸ் பாத்திரத்தில் நடித்தவர் காமெடி நடிகர் ராமராஜன். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வந்த இவர், சினிமாவுக்கு வருவதற்கு முன்  கூட்டுறவு வங்கி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

ராமராஜன் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேல சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாலா இவருக்கு அவன் இவன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார் அதன் பின்னர் ஒரு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் இன்றளவும் அவன் இவன் படம் தான் இவரின் அடையாளமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : கணவரை பிரிந்து வாடும் மீனாவின் திருமண நாள் இன்று – கடந்த ஆண்டு அவர் பதிவிட்ட பதிவு இதான்.

உடல் நலக்குறை :

இப்படி ஒரு நிலையில் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இப்படி ஒரு நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமாக இருக்கிறார் இவரின் வயது 22 மேலும் இவருக்கு மூன்று மகன்களும் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

பிரபலங்கள் இரங்கல் :

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அவரது சொந்த இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இறப்பிற்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் பேசிய போது ‘நான் பிறந்த ஜாதகமே இறைவனால் படைக்கப்பட்ட ஒன்று நல்ல தாய் தகப்பன். எங்களை நன்றாக வளர்த்தனர்.

கடந்த ஆண்டு அவர் அளித்த பேட்டி :

நாங்கள் விவசாய குடும்பம் தான் சிறுவயதில் காலையில் எழுந்து வயலுக்கு சென்று விட்டு வேலை செய்து பள்ளிக்கு ஓடுவேன் அதனால்தான் இன்றும் ஆக இருக்கிறேன் 19 வயதிலேயே வேலைக்கு சென்று ஒன்றாக வேலை செய்து பணி உயர்வை வாங்கினேன் என்று கூறி இருந்தார். பாரதிராஜாவின் மேனேஜர் என்னுடைய தம்பி பாலாவின் மூலம் தான் தனக்கு பாலா படத்தின் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறி இருந்தார்.

Advertisement