இனியாவை தேடி கோபி வீட்டுக்கு சென்ற பாக்யாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி. லேட்டஸ்ட் அப்டேட் இதோ.

0
394
- Advertisement -

இனியாவை தேடி கோபி வீட்டுக்கு சென்ற பாக்யாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி குறித்த அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் இவர்களுடன் ரேஷ்மா, விஷால், ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. மேலும், கடந்த சில மாதங்களாகவே பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி வேற லெவலில் எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம், சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த காட்சிகள் அரங்கேறி கொண்டு இருப்பது தான்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

சீரியலில் பாக்கியா- கோபிக்கு விவாகரத்து ஆகி விடுகிறது. பின் கோபி அவர் ஆசைப்பட்ட மாதிரி ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபியின் மொத்த குடும்பமுமே கோபி மீது கோபத்தில் இருக்கிறது. மேலும், சீரியலில், இனியா வீட்டில் உள்ள எல்லோருடனும் சண்டை போட்டு கோபி வீட்டிற்கு சென்று விடுகிறார். பின் கோபியின் அப்பா ராமமூர்த்தி இனியாவை அங்கே விடக்கூடாது என்று கோபியின் வீட்டிற்க்கே வந்து தங்குகிறார். ஆனால், இதை எல்லாம் பார்த்து ராதிகாவுக்கு பிடிக்காமல் கோபி மீது கோபப்படுகிறார்.

சீரியலின் கதை:

ராமமூர்த்தி-இனியா- ராதிகாவிடம் மாட்டி கொண்டு கோபிப்படும் பாடு என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு காண புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. சீரியலில் பாக்கியாவிற்கு புதிய கேண்டீன் ஆர்டர் கிடைக்கிறது. ராதிகா ஆபீஸில் தான் தனக்கு வேலை கிடைத்தது என்று பாக்யாவிற்கு தெரியாது. கோபியிடம் ராதிகா இதையெல்லாம் சொல்ல, கோபி இந்த ஆர்டரை கொடுக்க வேண்டாம் கேன்சல் செய் என்று சொல்கிறார்.

-விளம்பரம்-

புதிய அப்டேட்:

ஆனால், ராதிகா முடியாது என்று சொல்லி விடுகிறார். அப்போது டூர் சென்ற பள்ளி பேருந்து விபத்துக்குள்ளாகிறது என்ற தகவல் பாக்யாவிற்கும், கோபிக்கும் தெரிய வருகிறது. பின் கோபி-பாக்கியா இருவரும் பள்ளிக்கு செல்கிறார்கள். ஆனால், பள்ளியில் பாக்கியா இருப்பதை பார்த்த கோபி யாருக்கும் தெரியாமல் இனியாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்கிறார். பாக்யா பள்ளியில் விசாரிக்கிறார். அவருடைய அப்பா அழைத்து சென்று விட்டார் என்று கூறியவுடன் கோபியின் வீட்டிற்கு வருகிறார் பாக்கியா.

ராதிகா வீட்டில் பாக்கியாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி:

அங்கு, இனியா உன்னை பார்க்க வேண்டும். வெளியே வா இனியா! என்று அழுது புலம்புகிறார். ஆனால், கோபி இனியாவை வெளியே வரவிடாமல் நீ எதற்கு இங்கே வந்தாய், அவள் என்னுடைய மகள் என்று திட்டி துரத்த பார்க்கிறார். இது எல்லாம் பார்த்து ராதிகா அமைதியாக இருக்கிறார். இதோடு சீரியல் முடிகிறது. இனிவரும் காலங்களில் இனியா தன் அம்மாவின் மீதான பாசத்தை புரிந்து கொண்டு அவரிடம் செல்வாரா? இல்லை கோபி உடனே இருப்பாரா? என்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement