‘யாருக்கும் கஷ்டம் கொடுக்காம நடிச்சேன்’ – பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகுவதாக கண்ணீருடன் அறிவித்த ‘கோபி’ சதீஷ்

0
789
Baakiyalakshmi
- Advertisement -

பாக்யலட்சுமி தொடரில் இருந்து தான் விலகப்போவதாக சதிஷ் அறிவித்து இருப்பது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது.

-விளம்பரம்-

கோபி செய்த ரகளை :

தற்போது சீரியலில் கோபி, ராதிகா செய்யும் டார்ச்சர் தாங்க முடியாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். இதனால் ராதிகா கோபியிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறப் போனார். எப்படியோ ராதிகாவை சமாளித்து வீட்டிற்கு கோபி அழைத்து வந்தார். இதையெல்லாம் பார்த்த கோபியின் அம்மா ஈஸ்வரி அழுகிறார். பின் கோபியை அழைத்து நம்முடைய வீட்டிற்க்கே வந்துவிடு என்று கேட்கிறார்.

- Advertisement -

சீரியலின் கதை:

இதையெல்லாம் ராதிகா பார்த்து மீண்டும் சண்டை போடுகிறார். வழக்கம்போல் கோபி குடித்துவிட்டு ரோடில் விழுந்து கிடக்கிறார்.இந்த முறை செழியன் கோபியை அழைத்துக்கொண்டு பாக்கியா வீட்டிற்கு வருகிறார். இனிமேல் இங்குதான் கோபி இருப்பான் என்று ஈஸ்வரி கூறுகிறார். என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருக்கிறார் பாக்கியா. கோபி, பாக்கியா வீட்டில் இருப்பது ராதிகாவிற்கு தெரிய வருமா? கோபி மீண்டும் ராதிகாவிடம் செல்வாரா? இல்லையா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

சதீஸ் குறித்த தகவல்:

மேலும், இந்த தொடரில் கோபி கேரக்டரில் நடித்து ரசிர்களிடைய அதிகம் ரீச் ஆனவர் சதீஷ். குடும்ப இல்லத்தரசிகள் பலரும் கோபி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த தொடரின் மூலம் சதீஸ் மக்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கோபி மீண்டும் பாக்கியலட்சுமி வீட்டிற்கு சென்று விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ராதிகா என்னை விட்டு எப்படி நீ இந்த வீட்டிற்கு வரலாம் என்று அவரும் பாக்கிய வீட்டிற்கு வந்துவிட்டார்.

-விளம்பரம்-

சீரியலில் இருந்து விலகிய சதிஷ் :

இப்படி சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் தருணத்தில் இந்த தொடரில் இருந்து விலகுவதாக சதிஷ் அறிவித்திருப்பது வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டு இருக்கும் அவர் ‘நான் சொல்லப்போகும் இந்த விஷயம் நிறைய பேருக்கு கோபம் எரிச்சல் வருத்தத்தை தரலாம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும், இதை செய்துதான் ஆக வேண்டும். இன்னும் 10 15 எபிசோடுகளில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நான் விலகுகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

சுமாராக நடித்திருக்கிறேன் :

சதீஷ் ஆகிய நான் கோபியாக நடித்துக் கொண்டிருக்கும் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகுகிறேன். அதற்கு காரணங்கள் பல இருக்கிறது. ஆனால் சில தனிப்பட்ட காரணங்களும் இருக்கிறது. இந்த கோபி கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு விஜய் டிவிக்கு மிக்க நன்றி. நானும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் என்னை பாராட்டும் அளவிற்கு என்னால் முடிந்த அளவு சுமாராக நடித்திருக்கிறேன். என் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.

Advertisement