விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பிரச்சனைகளுக்கு பின் பாக்கியா மீண்டும் ரெஸ்டாரன்ட்டை திறந்திருந்தார். கல்லூரியில் நடன மாஸ்டரை வைத்து பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னதால் பாக்யா மாஸ்டரை சந்தித்தார். ஆனால், அவர் அதிகமாக செலவாகும் என்று சொன்னதால் பாக்கியா ஒத்து கொள்ளவில்லை. இனியா ரொம்ப கெஞ்சியும் பாக்யா ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் எழில், தன்னுடைய கதையைப் பற்றி தயாரிப்பாளிடம் சொல்ல அவரும் ஒத்துக்கொண்டார். இதை எழில், அமிர்தா-பாக்கியாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டார்.
இந்த வாரம் வீட்டின் சூழ்நிலையை எடுத்து சொல்லி புரிய வைத்தார் பாக்யா. ஆனால், இனியா ஒத்துக்கொள்ளவில்லை. கடைசியில் டான்ஸ் கிளாஸில் சேர்த்து விட முடியாது என்று பாக்கியா சொல்வதால் இனியா வருத்தப்பட்டு, தன்னுடைய அப்பா கோபியிடம் சொன்னார். உடனே அவர் வகுப்பில் சேர்த்து விடுவதாக வாக்குறுதி கொடுக்க, இனியாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், இதைக் கேட்ட ராதிகா, பாக்கியாவை பழிவாங்க தான் இப்படி எல்லாம் செய்கிறாய் என்று கேட்க, ஏதேதோ காரணம் சொல்லி கோபி சமாளித்தார். மறுநாள் கோபி, டான்ஸ் மாஸ்டரிம் பேசி இனியாவை கிளாஸில் சேர்ந்து விட்டார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் ரெஸ்டாரண்டில் புதிய ஆர்டர் எடுப்பதை பற்றி பாக்கியா பேசிக் கொண்டிருந்தார். அப்போ அந்த புது செப்பையும் வரவைத்து ஆர்டரை எடுக்கலாம் என்று பாக்கியா சொல்ல, எனக்கு அவர் மீதும், கோபி மீதும் தான் சந்தேகமாக இருக்கிறது. அவர் வேண்டாம் என்கிறார் செல்வி. ஆனால், பாக்கியா அதை நம்பவில்லை. மறுபடியும் அவர் வேலைக்கு வந்து சேர்கிறார். இவர்களும் புதிய ஆர்டர் எடுக்க தயாராகிறார்கள். இன்னொரு பக்கம் எழில் தன்னுடைய புது தயாரிப்பாளரை சந்தித்து கதையை பற்றி பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
இதையெல்லாம் ஒழிந்து நின்று கோபி கேட்டு சந்தோஷப்பட்டார். மேலும், எழில் சென்ற பின் கோபி தயாரிப்பாளரை சந்தித்து பேசும்போது, நீங்கள் இதை உங்கள் மகனிடம் சொல்ல மாட்டீர்களா? என்று கேட்டதற்கு, சொல்லும் நேரம் வந்தவுடன் பாக்யா முகத்திரையை கிழிப்பேன் என்று மனதுக்குள்ளேயே பேசிக்கொண்டார் கோபி. பின் தன்னுடைய மகள் கல்லூரிக்கு சென்று நடன வகுப்பை பற்றி கோபி விசாரித்தார். இனியாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் வீட்டில் இனியா நடனம் ஆடிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரி, பாக்யா வியப்பாக பார்த்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் செழியன் முன்பு போல் தன்னிடம் பேசுவதில்லை என்று ஜெனி அவருடைய அப்பாவிடம் புலம்ப, அவரும் நீ தைரியமாக இரு. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல் சொல்கிறார். டான்ஸ் கிளாஸில் இனியா மும்முரமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். கோபி- ராதிகா இதுவருமே இனியா டான்ஸ் பிராக்டிஸ் செய்வதை பார்க்க வருகிறார்கள். பின் அவர்களும் அவருக்கு ஆறுதல் சொல்லி துணையாக இருக்கிறார்கள். பின் கோபி தன்னுடைய ரெஸ்டாரண்டில் நண்பன் செந்தில் உடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது அந்த புது செஃப் மீண்டும் வேலையில் சேர்ந்த விஷயத்தை கோபியிடம் சொல்ல, அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார். அது மட்டும் இல்லாமல் பாக்கி எடுக்கப் போகும் பொது புது ஆர்டரிலும் பிரச்சனை செய்ய இருப்பதை பற்றி சொல்ல இதையெல்லாம் கேட்டு செந்தில் ரொம்பவே பதறுகிறார். ஆனால், கோபி இந்த முறை பாக்கியாவை ஒழித்து கட்ட தீவிரமாக செயல்படுகிறார். இனியாவின் டான்ஸ் காம்பெடிஷன் நடைபெற்றது. அதில் பாக்கியா- கோபி குடும்பத்தினர் கலந்து கொண்டிருந்தார்கள். இனியா நடனம் ஆடும் போது உற்சாகத்தில் கோபியும் நடனமாடி இருந்தார். கடைசியில் போட்டியில் இனியா வெற்றி பெற்றார் என்றவுடன் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.