போலீசில் புகார் கொடுக்கும் ராதிகா அம்மா, ஈஸ்வரியை கைது செய்ய வரும் போலீஸ்- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
41
- Advertisement -

‘பாக்கியலட்சுமி’ சீரியலின் ப்ரோமோ வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா என பலர் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று பாக்கியா சுற்றி கொண்டிருக்கிறார். பின் கோபியும் பாக்கியாவிற்கு போட்டியாக ரெஸ்ட்ராண்ட் திறந்தார். இன்னொரு பக்கம் ராதிகா கர்ப்பமாக இருந்தார். பின் வீட்டில் எல்லோருக்கும் இந்த உண்மை தெரிந்து அதிர்ச்சி ஆகி கோபியை திட்டினார்கள். ஈஸ்வரிக்கு, ராதிகா குழந்தையை பெற்று கொள்வதில் விருப்பம் இல்லை, கலைத்து விடு என்று சொன்னார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

இறுதியில் கோபி, ஈஸ்வரியை தன்னோடு அழைத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு சென்று விட்டார்.
கடந்த சில வாரங்களாக ஈஸ்வரி, ராதிகா அம்மா இடையே கலாட்டா கலவரங்கள் நடந்தது. ஈஸ்வரி வந்தது ராதிகா அம்மாவிற்கு பிடிக்கவில்லை. ஹோட்டல் வேலை பார்ப்பது, தன்னுடைய அம்மாவை கவனிப்பது என்று பம்பரம் போல கோபி சுத்திக் கொண்டிருந்தார். இதை பார்க்கும் ராதிகாவிற்கு கோபம் கோபமாக வந்தது. இப்படி இருக்கும் நிலையில், கடந்த வாரம் கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்து விடுகிறார்.

ராதிகா கர்ப்பம் கலைந்தது:

இதனால் மருத்துவர்கள், ராதிகா கர்ப்பம் கலைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். இதனைக் கேட்டு கோபமடைந்த ராதிகா, உங்க அம்மா தான் என்னை தள்ளிவிட்டார். உங்க அம்மா தான் என் குழந்தை கொன்று விட்டார். குழந்தை வேண்டாம் என்று சொல்லி சொல்லி கடைசியில் குழந்தையே இல்லாமல் போய்விட்டது என்று வருத்தப்பட்டு ராதிகா பேசுகிறார். ராதிகா அம்மா பயங்கரமாக ஈஸ்வரியை திட்டுகிறார். இதையெல்லாம் கேட்டு கோபி, தன் அம்மா மீது கோபப்படுகிறார்.

-விளம்பரம்-

இன்று எபிசோட்:

ஈஸ்வரி, நான் எதையும் செய்யவில்லை. இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அழுகிறார். இருந்தும் கோபி, நீங்கள் நினைத்தபடி குழந்தை கலைந்துவிட்டது சந்தோசமா! என்று திட்டுகிறார். பின் வீட்டிற்கு வந்த ராதிகா, ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். கோபியும் தன் அம்மாவை வெளியே போக சொன்னார். இதனால் மனமுடைந்த ஈஸ்வரி, பாக்கியா வீட்டிற்கு சென்று விடுகிறார். இருந்தாலும் கோபி சொன்னதை நினைத்து அழுது கொண்டே இருக்கிறார். இன்னொரு பக்கம் ராதிகா அம்மா கோபியை திட்டிக் கொண்டும், ஈஸ்வரியை திட்டிக்கொண்டே இருக்கிறார். இதனால் கோபமடைந்த கோபி, ராதிகா அம்மாவை அடிக்க போகிறார். இதனால் ராதிகா-கோபி இடையே சண்டை வருகிறது.

சீரியல் ப்ரோமோ:

இன்னொரு பக்கம், ஈஸ்வரி வருத்தத்துடன் இருப்பதால் அவரை பாக்கியா வெளியில் அழைத்துக் கொண்டு செல்கிறார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ராதிகா அம்மா போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுக்கிறார். இதனால் போலீசும் ஈஸ்வரியை கைது செய்ய பாக்கியா வீட்டிற்கு வருகிறது. ஆனால், அங்கு ஈஸ்வரி இல்லை. இனி வரும் நாட்களில் ஈஸ்வரியை போலீஸ் கைது செய்யுமா? கோபி என்ன செய்யப் போகிறார்? பாக்கியா எடுக்கும் முடிவு என்ன? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement