விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.
விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று பிசியாக சுற்றி கொண்டிருக்கிறார். பின் கோபியும் பாக்கியாவிற்கு போட்டியாக ரெஸ்ட்ராண்ட் திறக்கிறார். மேலும், கடந்த வாரம் எபிசோடில் பழனிசாமிக்கு பாக்யா மீது காதல் ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் ராதிகா கர்ப்பமாக இருப்பதாக புதிய ட்ராக்கை ஆரம்பித்து இருக்கின்றனர். கோபிக்கு பேரன், பேத்தி இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் தந்தையாகி இருக்கிறார் கோபி. ஆனால், இதை வீட்டில் சொல்ல கோபி தயங்குகிறார். இந்த உண்மையை பாக்யா கண்டுபிடித்து ராதிகாவிற்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
மேலும், வீட்டில் எல்லோரிடம் இந்த உண்மையை சொல்லியே தீர வேண்டும் என்று ராதிகா சொல்கிறார்.
ஒரு வழியாக கோபி தன்னுடைய அம்மா ஈஸ்வரி இடம் சொல்லி விடுகிறார். அவர் குழந்தையை கலைத்துவிடு என்று ராதிகாவிடம் சொல்ல ராதிகா கோபப்பட்டு, இதை சொல்ல நீங்கள் யார்? இது என்னுடைய விருப்பம் என்று ஈஸ்வரியை எதிர்த்து பேசுகிறார். பின் ராதிகா,கோபி வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து உண்மை சொல்ல பார்க்கிறார்கள். ஆனால், கோபி சொல்ல முடியாமல் திணறுகிறார். எல்லோருமே எந்த விஷயம் என்று கேட்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
உடனே பாக்யா, உங்கள் அப்பா மீண்டும் அப்பாவாக போகிறார் என்று சொன்னதை கேட்டு எல்லோருமே அதிர்ச்சி ஆகிறார்கள். பின் செழியன்- எழில் இருவருமே சேர்ந்து எப்போது நீங்கள் இந்த வீட்டை விட்டு வெளியே போகிறீர்கள்? என்று கோபியிடம் கேட்கிறார்கள். அதற்கு கோபி, நான் எதற்கு போகணும்? இந்த வீடு நான் கட்டியது என்று சொல்கிறார். அதன் பின் வாக்குவாதம் ஏற்பட்டு கோபி வீட்டை விட்டு கிளம்ப நினைக்கிறார். ஆனால், ஈஸ்வரியை தன்னோடு அழைத்து போகிறார் கோபி.
ராதிகா வீட்டில் நடக்கும் கலாட்டா:
இதை பார்த்து பாக்கியா எதுவுமே பேசவில்லை. ராதிகா வீட்டில் ஈஸ்வரி வருவதை பார்த்து அவருடைய அம்மா அதிர்ச்சியில் நிற்கிறார். ஈஸ்வரி வந்தது ராதிகா அம்மாவிற்கு பிடிக்கவில்லை.இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ராதிகா வீட்டில் ஈஸ்வரி அதிகாரம் பண்ண நினைக்கிறார். இதையெல்லாம் பார்த்து ராதிகாவின் அம்மா எந்த வேலையும் செய்யாதே என்று சொல்கிறார்.
சீரியல் ப்ரோமோ:
ஒரு கட்டத்தில் கடுப்பான ஈஸ்வரி, தன் மகனிடம் காப்பி கேட்டும் கிடைக்கவில்லை எனக்கு மயக்கம் வந்துவிட்டது, மாத்திரை போடவில்லை என்று டிராமா போடுகிறார். இதைக் கேட்டு கோபி, கோபமடைந்து ராதிகாவிடம் கத்துகிறார். ராதிகா அவருடைய அம்மாவும் ஈஸ்வரிக்கு சமைக்க செல்கிறார்கள். அப்போது ஈஸ்வரி கால் மேல் கால் போட்டு சந்தோசமாக டிவியை பார்த்துக் கொண்டிருக்கிறார். இனிவரும் நாட்களில் ஈஸ்வரியை ராதிகா எப்படி சமாளிக்கப் போகிறார்? இனி ராதிகா வீட்டில் என்னென்ன கலவரங்கள் வரப்போகிறது? ஈஸ்வரி, பாக்யா வீட்டிற்கு செல்வாரா? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.