பாக்கியலட்சுமி தொடரில் யாரும் எதிர்பாராத என்ட்ரி – எழில் மற்றும் அமிர்தா என்ன செய்ய போகிறார்கள் ?

0
1076
- Advertisement -

யாரும் எதிர்பார்க்காத பாக்கியலட்சுமி சீரியலின் புதிய டீவ்ஸ்ட்க்கான ப்ரோமோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் தற்போது டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை தொடர்ந்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

தற்போது சீரியலில் இனியா-பாக்கியா கல்லூரி ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. அதாவது, இனியா 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி மீடியா சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேர்ந்து விடுகிறார். பின் பாக்யா எழியிடம் கல்லூரி படிப்பது குறித்து பேசுகிறார். அதற்கு எழில் உதவி செய்கிறார். பின் இதை வீட்டில் உள்ள எல்லோரிடமும் பாக்கியம் சொல்கிறார். இதனால் அனைவரும் பாக்கியா கல்லூரிக்கு செல்ல சம்மதம் சொல்கிறார்கள். இதை கோபியிடம் சொல்ல வழக்கம்போல் கோபி புலம்புகிறார்.

சீரியலின் கதை:

பின் கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கேண்டினில் சில பிரச்சினை வந்ததால் இங்கிலீஷ் கிளாசை விட்டு விடுகிறார் பாக்கியா. இருந்தாலும் பழனிச்சாமி அவருக்கு உதவி செய்கிறார். இன்னொரு பக்கம் ஜெனிக்கு வளைகாப்பு செய்து வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். ஆனால், செழியன் தன்னுடன் வேலை செய்யும் பெண் உடன் நெருங்கி பழக நினைக்கிறார். அதேசமயம் இனியாவின் கல்லூரியில் ட்ரிப் போக வேண்டும் என்று சொல்கிறார்கள். இதனால் கோபியும் இனியாவும் செல்ல நினைக்கிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் ப்ரோமோ:

அப்போது மையு பெரிய பெண் ஆகிவிட்டதால் கோபியால் செல்ல முடியவில்லை. பின் பாக்கியா, இனியா, ஈஸ்வரி, செல்வி ஆகியோர் ட்ரிப் செல்கிறார்கள். இப்படி எந்த ஒரு சுவாரசியமும் இல்லாமல் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வார ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில், அமிர்தாவின் கணவர் உயிருடன் வருகிறார். அமிர்தா ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இவருடைய கணவர் கணேஷ் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். அதை தெரிந்தும் எழில் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

சீரியலின் புதிய டீவ்ஸ்ட்:

இப்படி இருக்கும் நிலையில் அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் திரும்பி வருகிறார். இதை பார்த்து கணேசன் பெற்றோர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். பின் கணேஷ், அமிர்தா எங்கே என்று கேட்கிறார். என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக நிற்கிறார்கள். இத்துடன் ப்ரோமோ முடிகிறது. இனிவரும் நாட்களில் அமிர்தாவுக்கு திருமணம் ஆனது கணேசுக்கு தெரிய வருமா? அமிர்தா எழிலை ஏற்றுக் கொள்வாரா? என்ன நடக்கும்? போன்ற அதிரடி திருப்பங்களுடன் சீரியல் செல்ல இருக்கிறது.

Advertisement