பாக்கியலட்சுமி சீரியலை விட்டு போக முடிவெடுத்த கோபி ? – புலம்பி வெளியிட்ட வீடியோ இதோ.

0
475
gopi
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு கோபி சதீஷ் விலக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த தொடரில் இவர்களுடன் ரேஷ்மா, விஷால், ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். இந்த தொடர் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை, சுயமரியாதை இருக்க வேண்டும் என்றும், பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதையும் பாக்கியா கதாபாத்திரம் உணர்த்துகிறது. அதிலும் கடந்த சில வாரமாக பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம், சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தான்.

சீரியலின் கதை:

தற்போது சீரியலில் பாக்கியா கோபியிக்கு விவாகரத்து கொடுத்து வருகிறார். நீதிமன்றமும் இவர்கள் இருவருக்குமே விவாகரத்து கொடுத்து விடுகிறது. அதற்கு பிறகு வீட்டிற்கு வரக்கூடாது என்று கோபி திட்டுகிறார். அதையும் மீறி கோபியின் வீட்டிற்கு வருகிறார் பாக்கியா. பின் கோபி தகாத வார்த்தைகளால் பாக்கியாவை திட்டுகிறார். ஆனால், பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். கோபியின் மொத்த குடும்பமே பாக்கியாவை நிற்க வைத்து கேள்வி கேட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

கோபி சதீஸ் வெளியிட்ட வீடியோ:

இதனை அடுத்து பாக்கியா என்ன செய்யப்போகிறார்? கோபியை பாக்கியா வீட்டை விட்டு வெளியே அனுப்புவரா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கோபி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பாக்கியலட்சுமி சீரியலில் என்ன நடக்கிறது என்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். அடுத்த சில நாட்களுக்கு சீரியல் ரொம்ப மோசமாக இருக்கப்போகிறது. என்னுடைய கதாபாத்திரத்தை குறித்து பலரும் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

சீரியல் குறித்து கோபி சொன்னது:

இது வெறும் நடிப்புதான். தெரிந்தோ தெரியாமலோ நான் கோபி கதாபாத்திரம் மூலமாக உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். இது வெறும் நடிப்புதான். எனக்கு தெரியும். இதனால் சில பேர் என்னை வருத்தப் பட வேண்டாம் என்று சொல்கிறார்கள். திட்டுபவர்கள் திட்டட்டும். இதும் ஒரு விருது வாங்குவது போல தான் இருக்கிறது. இந்த மாதிரி எல்லாம் சீரியலில் நடப்பது எனக்கே கஷ்டமாக தான் இருக்கிறது. சீரியலை விட்டு விட்டுப் போய்விடலாம் என்று தோன்றுகிறது.
பாசிட்டிவ், அமைதியான கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால், எடுத்த வேலையை முடிக்க வேண்டும் அல்லவா! அதனால்தான் இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement