அம்மாவை எதிர்பார்க்கும் இனியா, பிரச்சனையில் சிக்கிய பாக்கியா – பரபரப்பின் உச்சத்தில் செல்லும் பாக்கியலட்சுமி சீரியல்

0
1650
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலின் புதிய ப்ரோமோ குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் தற்போது டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

சீரியலில் ராதிகா- கோபி இருவரும் பாக்யாவின் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். வீட்டில் உள்ள எல்லோரும் அவர்களை வெளியே அனுப்ப பார்க்கிறார்கள். ஆனால், இருவரும் போகாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள். என்ன செய்வதென்று புரியாமல் பாக்யாவும், மொத்த குடும்பமும் சோகத்தில் தவித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து ராதிகாவுக்கும், ஈஸ்வரிக்கும் இடையே சண்டை சச்சரவு நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கு கோபி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ராதிகா கோபப்பட்டு ஈஸ்வரியை திட்டி விடுகிறார்.

சீரியலின் கதை:

இதனால் ஆத்திரமடைந்த பாக்கியா, கோபியையும் ராதிகாவையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். அதற்கு கோபி, நீ இந்த வீட்டிற்க்கான முழு தொகையும் கொடுத்தால் தான் செல்வேன் என்று பாக்யாவிடம் சொல்கிறார். இதனால் பாக்கியா இன்னும் ஒரு மாதத்திற்குள் மொத்தம் 18 லட்சம் ரூபாயை கொடுத்து விடுகிறேன். அதற்குப்பின் நீங்கள் இருவரும் இந்த வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று சவால் விடுகிறார். பின் தான் போட்ட சவாலில் வெற்றி பெற வேண்டும் என்று பாக்யா ஒரு புதிய சமையல் ஆர்டரை வாங்குகிறார்.

-விளம்பரம்-

இனியா வாங்கிய மதிப்பெண்:

மேலும், பாக்கியலட்சுமி கோபியிடம் விட்ட சவாலில் வெற்றி பெற்று வீட்டை தன்னுடைய பெயரில் மாற்றிக்கொண்டார். இன்னொரு பக்கம் ராதிகாவிற்கு கம்பெனியிலிருந்து உயர் பதவி கிடைக்கிறது.பின் இனியா 12 ஆம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதாவது, சீரியலில் இனியா 600க்கு 596 மதிப்பெண் வாங்கி இருக்கிறார். இதனால் தற்போது பள்ளியில் இனியாவிற்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. மாணவர்களும், ஆசிரியர்களும் இனியாவை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள்.

சீரியலின் புதிய அப்டேட்:

பின் மேடையில் இனியாவிற்கு பரிசு வழங்குகிறார்கள். அப்போது கோபியும் ராதிகாவும் போய் இனியா பக்கத்தில் நிற்கிறார்கள். இதனால் இனியா தன்னுடைய அம்மா வரவில்லை என்று வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் பழனிசாமி தாத்தாவும் பாக்யா சமைக்கும் இடத்திற்கு செல்கிறார்கள். அங்கு நிச்சயதார்த்தம் நின்று பிரச்சனை நடைபெறுகிறது. இதனால் பாக்யாவை பழனி சாமி காப்பாற்றுவாரா? இனியாவிற்கு பாக்யாவின் மீது வெறுப்பு ஏற்படுமா? இனியா ராதிகாவை ஏற்பாரா? என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டிருப்பதால் அடுத்த எபிசோடு பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement