பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகிய பின்னர் முதன் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரோஷினி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் பாரதி கண்ணம்மா ஒன்று. இந்த சீரியல் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்றுகொண்டிருக்கின்றது. மேலும், பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் பேவரட் சீரியல்களில் ஒன்றாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் தற்போது இந்த சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார்.அக்டோபர் 23ஆம் தேதி சனிக்கிழமை சூட்டிங்கில் ரோஷினி கலந்து கொண்டுள்ளார். பின் நான் இன்றில் இருந்து சீரியலில் இருந்து விடை பெறுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாராம்.
இதையும் பாருங்க : தன் திரை வாழ்க்கையில் முதன் முறையாக ஐட்டம் பாடலில் ஆடப்போகும் சமந்தா – அதுவும் யார் படத்தில் பாருங்க. (சம்பளம் எவ்ளோ தெரியுமா)
இந்த சீரியல் மூலம் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் வந்ததாகவும், சினிமாவில் கவனம் செலுத்துவதற்காக தான் சீரியலில் இருந்து வெளியேறுகின்றார் என்றும் கூறுகின்றனர். தற்போது இவருக்கு பதிலாக வினுஷா தேவி என்பவர் கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.
இன்று புதிய ரோஷினி என்ட்ரி கொடுத்த நிலையில் ரோஷினி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘பாரதி கண்ணம்மா தொடரில் சில காரணத்தால் என்னால் தொடர முடியவில்லை. என்னுடைய இந்த முடிவு உங்களை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் ஆதரவு இல்லாமல் இவ்வளவு தூரம் என்னால் வந்திருக்க முடியாது. எதிர்காலத்திலும் இதே போல ஆதரவை எனக்கு தருவீர்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.