தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீதேவி முடி சூடா ராணியாக திகழ்ந்து வந்தார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய திரையுலகில் மாபெரும் நடிகையாக திகழ்ந்து வந்தார் நடிகை ஸ்ரீதேவி . கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி துபாயில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மேலும் அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அவரது மரணம் இயற்கையானது என்று தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அவரது மரணம் குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.
மேலும், அவர் ரூ.240 கோடி ரூபாய் காப்பீடு பணத்திற்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று உதவி ஆணையர் வேத் பூஷண் என்பவர் கூறியிருந்தார். நடிகை ஸ்ரீ தேவி மரணமடைந்த நாள் முதல் அவர் திட்டமிட்டு தான் கொலை செய்துள்ளனர் என்று தொடர்ந்து தெரிவித்துவருகிறார். சமீபத்தில் இது பற்றி அவர் தெரிவிக்கையில் ” ஸ்ரீதேவி இறப்பிற்கான காரணம் அவர் தண்ணீர் தொட்டியில் மூச்சி திணறி இருந்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவரது நுரையீரலில் எந்த அளவிற்கு தண்ணீர் இருந்தது என்று குறிப்பிடப்படவில்லை .அந்த விவரத்தை கேட்ட போதும் அதனை கூற துபாய் போலீசார் தர மறுத்து விட்டார்கள்” என்று கூறியிருந்தார்.
இப்படி ஸ்ரீதேவி மரணத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு முடிவு தெரியாமல் தான் இருக்கிறது. சமீபத்தில் கூட ஸ்ரீதேவியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவியை போலவே பிரபல இருக்கும் பிரபல பெங்கால் நடிகையின் சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அவருடைய பெயர் ருத்ர சாக இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமானவர்.
இவரை சமூக வலைத்தளத்தில் பல பேர் பின் தொடர்கின்றனர். மேலும் இவர் யூட்யூப் மூலம் மிகவும் சிறிய காலத்திலேயே பிரபலமடைந்தார் பெங்கால் மாடல் அழகியான இந்த இளம் நடிகைக்கு காங்கிரஸ் என்ற பட்டப்பெயரும் இணையத்தில் இருக்கிறது மேலும் இவர் பார்ப்பதற்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவி போலவே இருக்கிறார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள் இந்த நிலையில் இவரது சில கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.