சிவகார்த்திகேயனுடன் இருந்த பிரச்சனை, விஜய் டிவியில் இருந்து விலகிய காரணம் – பல விஷயங்களை ஓபன் செய்த பாவனா.

0
596
- Advertisement -

விஜய் டிவியை விட்டு வெளியேறியதற்கு இதுதான் காரணம் என்று முதன் முதலாக மனம் திறந்து தொகுப்பாளர் பாவனா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் எத்தனையோ பெண் தொகுப்பாளர்கள் வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வரும் பெண் தொகுப்பாளினிகள் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்கள். டிடி, பிரியங்கா தொடங்கி சமீபத்தில் வந்த ஜாக்லின் வரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் தொகுப்பாளினிகள் ஏராளம்.

-விளம்பரம்-

அந்தவகையில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. இவர் முதன் முதலில் ரேடியோ ஜாக்கியாகத் தான் தன்னுடைய கேரியை தொடங்கினார். அதற்கு பிறகு ராஜ் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தார். அதனைத் தொடர்ந்து தான் இவருக்கு விஜய் டிவியில் தொகுபாளினியாக வாய்ப்பு கிடைத்தது. ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளை இவர் தான் தொகுத்து வழங்கி இருந்தார்.

- Advertisement -

பாவனா குறித்த தகவல்:

மேலும், விஜய் டிவியின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்றே சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இவர் பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து வழங்கியிருந்தார். பின் இவருக்கு கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தவுடன் அங்கு சென்று விட்டார். தற்போது இவர் ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

பாவனா பேட்டி:

அதோடு இவர் பட நிகழ்ச்சி, விருது விழா, நிகழ்ச்சிகள் மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். பின் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து இவர் விஜய் டிவி பக்கமே வருவதில்லை. இவர் விஜய் டிவியில் இருந்து விலகியது குறித்து ரசிகர்கள் பலருமே கேள்வி கேட்டிருந்தார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் பாவனா, எவ்வளவுதான் நாம் பெஸ்ட் கொடுத்தாலும் ஆண்கள் தான் அதிகம் மதிக்கப்படுகிறார்கள். பெண்களை இரண்டாவதாக தான் நினைக்கிறார்கள்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் விலக காரணம்:

இது போன்ற சில காரணங்களால் தான் நான் விஜய் டிவியில் இருந்து விலகி விட்டேன். நான் விஜய் டிவியில் பணியாற்றிய போது சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். அவருடன் நான் அதிகம் பேசியது கிடையாது. நான் தொகுப்பாளராக இருக்கும் போது அவர் விஜய் டிவியில் கண்டஸ்டெண்டாக இருந்தார். அதன் பிறகு தான் அவர் நிகழ்ச்சிகளை தொகுக்க வழங்க ஆரம்பித்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் எங்களுக்குள் ஒரு இடைவெளி இருந்தது.

தொகுப்பாளர்கள் குறித்து சொன்னது:

நான் மற்றவர்களிடம் பேசுவது போல் அவரிடம் சகஜமாக பேசியது கிடையாது. ஆனால், மாகாபா உடன் எனக்கு நல்ல சிங் இருக்கும். மற்ற தொகுப்பாளருடன் பணியாற்றும் போது இருவரும் என்ன பேச வேண்டும் என்பதை எழுதி வைத்துக்கொண்டு தான் பேசுவோம். ஆனால், மாகாபாவுடன் பேசும்போது ஸ்பாட்டிலேயே பேசுவோம். அதேபோல் அவரும் எனக்கு ஸ்பேஸ் கொடுத்து பேசுவார். அதேபோல் தொகுப்பாளர் விஜய் என்னை எப்போதும் குருநாதா என்று தான் அழைப்பார். அவர் ரொம்ப திறமையானவர். அவருடன் சேர்ந்து பல நிகழ்ச்சிகளை நான் தொகுத்து வழங்கி இருக்கிறேன் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement